நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக்குளம். நீ வந்திருக்க வேண்டாம் #கல்யாண்ஜி #ஜாவியின்_கிறுக்கல்கள் #அவள்