மௌனத்தாரகை என் கற்பனைக்கும் சிக்காத சில வரிகள் எல்லாம் வாரி இழைத்த வள்ளல் அவள் மௌனத்தாரகை தேன்துலாவி மன பதியம் செய்து மெல்ல கிளற கிளற இன்பம் தந்த கற்பக விருட்சம் அவள் மௌனத்தாரகை என் கனவுகள் எல்லாம் கைசேரும் நேரத்தில் கனவுகள் யாவும் மாயை என நிஜத்தினை போதித் அவள்..! மௌனத்தாரகை எனக்கு இன்னொரு வாழ்வு தந்து அதிலே பிரிந்து சென்று தனியே வாழ வழியும் சொன்ன அவள்..! என் நிஜங்களில் வாழா எனது அன்புள்ள நிரஞ்சனா(மௌனத்தாரகை)..! இன்னும் என் கதைகளில் வாழ்கிறாள் கவிதைகளில் உயிர் தருகிறாள்..! எங்கோ ஓர் மூளையில், யாரோ என் கவிதைகள் படிக்க, இன்னும்..! அவள் அர்த்தம் சேர்கிறாள். இக்கவிதையோடு சேர்த்து 150 #மௌனத்தாரகை கவிதைகள் உன் வர்ணனை தொட்டு, உன் கவிதைகளும் சேர்த்து, நம் காதல் பேசி, உன் குணங்கள் சொல்லி, என் வலிகளை சொல்வதோடு, என் அன்பையும் தருகிறது..! இன்று இதை காண நீ இல்லை என்றாலும் என்றோ ஓர் நாள் என் காதலும் உனை சேரும்.. அப்போது நீ வடிக்கும் ஓர் சொட்டு கண்ணீர்.. என் காதலுக்கு கிடைக்கின்ற பாரத ரத்னா...! நீ இல்லை என்றாலும் உனை மதிக்கும் உன் ஒருதலை காதலன் ~ அன்பின் இரவல் நலம் காண் நல்லுயிரே..! .