என்னோடு நான் பேச வந்திருக்கிறேன் என்னோடு நீ ஏன் பேசுகிறாய் வீரியம் கொண்டு வருகிறாய் என்று விலகி நின்றேன் தென்றலாய் தென்பட்டு கொஞ்சுகிறாய்... சிவனே என்று ஒதுங்கி நிற்கிறேன் சில்லென்று மனதை சிறை பிடிக்கிறாய் சில நேரம் வருடி கொடுக்கிறாய் சில நேரம் வருத்தம் கொடுக்கிறாய் சில நேரம் அனைத்தையும் மறக்க அடிக்கிறாய் சில நேரம் மறந்த அனைத்தையும் ஞாபக படுத்துகிறாய் சில நேரம் வலிகளை உன்னோடு கடத்தி செல்கிறாய் சில நேரம் வலிகளை என்னோடு கிடத்தி செல்கிறாய் சில நேரம் மனதிற்கு ஓய்வு அளிக்கிறாய் சில நேரம் மனதில் ஆசை விதைத்து ஆராவாரம் செய்கிறாய் சில நேரம் தென்றலாய் வந்து அமைதி கொடுக்கிறாய் சில நேரம் புயலாய் வந்து அமைதி கெடுக்கிறாய் என்னோடு நீ பேசுகிறாய் உன்னோடு என்னால் பேச முடியவில்லை எழுதுகிறேன்... என்னோடு நான் பேச வந்திருக்கிறேன் என்னோடு நீ ஏன் பேசுகிறாய் வீரியம் கொண்டு வருகிறாய் என்று விலகி நின்றேன் தென்றலாய் தென்பட்டு கொஞ்சுகிறாய்... சிவனே என்று ஒதுங்கி நிற்கிறேன் சில்லென்று மனதை சிறை பிடிக்கிறாய் சில நேரம் வருடி கொடுக்கிறாய்