அந்த பறவை எந்த மரத்தைத் தேடுகிறது மனமில்லாத இடத்தில் பறந்து. + துறவிகள் இல்லாத மடம் தங்கி காலம் கழிக்கிறார்கள் ஊர் சுற்றும் நாடோடிகள். + மேகம் இருண்டது வழிதேடி அலைந்து மழையில் நனைகிறது தும்பி. + வெளியில் கொட்டும் மழை தொலைக்காட்சியில் காரசாரமான தண்ணீர் விவாதம். + உச்சநிலை பேச்சு கவனியாமல் காத்திருக்கு டீப்பாய் மேல் சூடான டீ. + விலைமதிப்பற்றது உலகில் குழந்தைகள் கட்டிய மணல் வீடு கரைத்து விட்டது மழை. + வானில் மின்னல் குடும்பத்தில் இன்னல் கடப்பவன் அறிவாளி. ந க துறைவன். மழை