இதைப்போலொரு மழைநாளில் உனக்கு ஞாபகம் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை... ஆனால், என் நினைவில் இன்றும் நீ கூறிய அந்தசொல் நிழலாடுகிறது, என் அருகில் நீ இருந்த இரவுப்பகல், பகலிரவு நினைவால் உருகுகிறேன்... உன் நிழலோடு பேசி நடந்த, கரைந்த காலங்களில் உறைகிறேன்... நீ கூறிய சொற்களை நினைத்து, நினைத்தே நித்தமும் மருகுகிறேன்... "நீ கூறிய அந்த ஒரு சொல்; என் செவி கேட்ட, உன்னுடைய கடைசி சொல்!..." "நான் தான் உன் நினைவில் இல்லை நீ கூறியதாவது உள்ளதா?..." என்ற கேள்வியோடு முடிக்கிறேன், விடை வேண்டா ஆதவனாய்!... Aadhav_Rj© #love #romantic #romanticism #One_sided_love #tamil #kavithai #aadhav_rj #aadhavrj @aadhavrj