Gifts #Iniyum #Nadakathu... எங்கே விழுந்தோம் எனத்தான் தெரியவில்லை ஆனால், எங்கள்மீதுதான் ஏறிக்கொண்டு சென்றுள்ளனர்... துருவேறிய இரும்பு பலம் குறைவதைப் போல சாதிய கழிவை எங்கள் மீது மீண்டும் மீண்டும் கொட்டி தரம் இழக்கச் செய்ததுதானே உன் வேத வழி கற்றலும் கற்பிதமும்... மனிதத்தின் பரிணாமத்தை பரிமாணம் கொண்டு விளக்கும் அறிவை எங்களில் அடைந்தோம் சமநிலை வாழ்வியலுக்கு சமநிறை இலக்கணம் படைத்தோம் என்பதால் உண்டான உன் சினத் தீயின் பொசுக்குதலுக்கு எங்கள் சேரி இரையாகும் என்ற கனவு இனியும் நடக்காது... - எஸ். உதய பாலா, கீரனூர். Udhaya Bala S Poem