இயற்கை அழகில் மனிதம் வளர்த்து, நாகரீக கலைகள் முற்றும் புகட்டி. மூச்சுக் காற்றின் மூலமே என்று, பாமரன் கானா பண்ணுயிர் கொண்டு. நவீன மனிதன் கால்கள் பதியா, அமேசான் என்னும் ஆதியில் புகுந்து. எண்ணெய் திருட சண்டை இட்டு, பன்னாட்டு கழிவாய் கருகிய கவிதை. இன்னும் எரியும் கோபக் கனலாய், மூச்சை பிடிக்கும் பசுமை அனலாய். எஞ்சி இருந்த ஒற்றை குடும்பமும், கருகிக் கழியும் கார்பன் அலைகள். உலகின் பாதி அழிவின் விளிம்பில், இன்னும் உண்டோ எத்தனை வினைகள்... #நவீன_நாகரீகம் #அழிவின்_விளிம்பு மாலை வணக்கம்! காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம்.