வனப்பு வருணனை வடிக்காத வெண்பாவே ! வாடாத பெண்பூவே ! வாடைக் காற்றில் மடிக்காத முகிலே! மரிக்கொழுந்து அகிலே! மீன்கள் குடியிருக்கும் தடிக்காத இதழ்விழியே ! தங்கப்பூ மேனியே ! தளிரே! மொட்டே ! கடிக்காமல் கன்னத்தில் கறுமீசை வைத்து கண்புருவத் தோடிணைப்பேன் தீட்டாத ஓவியமே! தேயாத வெண்ணிலவே! தேகம் தன்னில் ஒட்டாத தாமரையே ! ஒழுகாத பழச்சாரே! ஒளிரும் பூமுகத்தில் காட்டாதே கதிரவனை குண்டுமல்லி குருதவல்லியே ! கையை எட்டினாலும் சிட்டாத சிறுகுயிலே ! சிட்டுக்குருவி விழியழகே! சீலையுடுத்திய சிலையழகே ! தேனொழுகும் சுவையுதடு தித்திப்பு நல்கும் தளிர்கொடி கன்னம் வெண்ணையில் வடித்த வெண்ணிலா சிற்பம் வானவில் வண்ணத்தில் புனைந்த ஓவியம் பூக்கள் பூக்கும் பாவை எழில்மேனி நனைந்த புல்வெளிபோல் நீராடி தலையுலர்த்தும் ' நீர்வார்ப் புனலே ! #வாசம் வீசும் வார்த்தைகள் .