கிளை யுதிர்ந்த இலை தரை தொடுவதற்குள் ஓராயிரம் எண்ணம், உயரத்தில் காற்றடிக்க அல்லாடி பச்சை தோலுடுத்தி அமைதிக்கு அளவியலாய், மௌனங்கள் பரிணமிக்கும் பிரளய பூச்சொரிவும், புரியா பொருளும் பொதி சுமையென பறவையின் எச்சங்கள் ஏந்தி யவர்தந்த ஜென்ம சாபல்யமோ சருகாகி தரை ஏகிய இலை சட்டென அங்கே கடக்கும் பெண்ணின் அங்கம் பாய.. ஆஹா..! அங்கே துளிர்த்தது அதன் இரண்டாம் அத்யாயம் இது ஒரு ஏகதேச உருவக கவிதை...! நான் மனதில் நினைத்த பொருளை இலையோடு உருவக படுத்தி கவியாக்கியுள்ளேன்..! ஓரளவு புரியும் எதை குறிப்பிட்டேன் என..! புரிந்தால் பூரிப்படையுங்கள்..! புரியாவிடில் என்னை கிறுக்கனென ஏசி புன்னகை செய்யுங்கள்..! #yqbaba #yqகண்மணி #yqkanmani #teakadaikavithaigal #yqtamil #காதலியம்