மிகைமிஞ்சிய அன்பும் வேண்டாம் அரிதாய் கிடைக்கும் அக்கறையும் வேண்டாம் வர்ணித்து வியப்பூட்டும் வார்த்தை ஜாலமும் வேண்டாம் ஒரு சொல் எனினும் சுடு சொல்லாய் உமிழவும் வேண்டாம் எனை காக்கும் நிழலாய் துணை இருக்கவும் வேண்டாம் கலைந்த மேகங்களாய் காணாமல் போகவும் வேண்டாம் எது தான் வேண்டும் என்கிறாயா? இந்நிலையில் நீ இருக்கும் இயல்பில் எந்நிலையிலும் உடனிரு.. அது போதும் #ckகவிதை