அண்ணன் - தங்கையின் அன்பகராதி ! ( சிறுகதை கீழே 👇) உலகம் முழுதும் எத்தனையோ உறவுகள் இருக்க, இந்த அண்ணன் தங்கை உறவு மட்டும் ஏனோ, அன்பின் ஊற்றாக, பாசத்தின் மறு உருவமாக இருக்கும். சொல்லாமல் இன்பம் அளித்து, சொல்லி காட்டாமல் கடமைகள் பகர தெரிந்த ஒரே உறவு அண்ணன்களின் உறவு தான். ஏக்கங்கள் என்றுமே சற்று அதிகம் தான். ஆனால், அதையும் சொல்லாமல் புரிந்து கொள்ள தெரிந்தவன் அண்ணன் ஒருவனே ! அன்னிக்கு காலைலையும் வழக்கம் போல தூங்கிட்டு இருந்த கண்மணிய வந்து, அவங்க அண்ணா எட்டி ஒதச்சு எழுப்பினான். " அடியே , எந்திரிடி ! காலேஜ்க்கு ஒரு நாளாசும் சீக்கிரம் போனுனு அறிவு இருக்கா ? எப்ப பாத்தாலும் லேட் ஆவே போ ! " அப்டின்னு திட்டிடே டீ ஆ நல்ல ஆத்தி குடுத்தான் . " டேய் அண்ணா . ஏன்டா காலைலையே கத்துற , கடுப்பு ஏத்தாதடா. என் மார்னிங் அலாரமே நீ தான்டா. ஃபோன்ல கூட அலாரம் வெக்க வேணாம். நீ கத்துர கத்தே போதும்டா!"