Nojoto: Largest Storytelling Platform
ramyav9141280552516
  • 7Stories
  • 13Followers
  • 63Love
    318Views

Ramya V

  • Popular
  • Latest
  • Video
4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

love status

love status #காதல்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

Part 5 
கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்து இருந்தது அவனுடைய பற்கள் எல்லாம் நீளமாக இருந்தது அவனுடைய கன்னங்களில் இருந்து ரத்தம் ஓழுகும் கீறல்கள் இருந்தன.

நெற்றியில் மிகப்பெரிய தீக் காயம் அந்த உருவத்தை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பேச்சு வரவில்லை என் உயிர் இவனிடம் சிக்கி கொண்டது என்று பயத்தில் எனக்கு வியர்த்து கொட்டியது கால் இரண்டும் நடுங்கியது அவன் எந்த விதமான சத்தத்தையும் எழுப்ப வில்லை அவன் என்னை கடந்து அந்த நாற்காலி அருகில் சென்றான்

அந்த நாற்காலியில் கூடையை காணாமல் அவன் வானம் அதிர கத்தினான் நாலாபுறமும் கண்களை நோட்டமிட்டு மீண்டும் வீடே இடிந்து விழும் அளவுக்கு கத்தினான் நான் அச்சத்தில் கீழே உட்கார்ந்து அவனை பார்க்காமல் சுவர் பக்கமாக திரும்பி கொண்டேன்.

உதடுகள் துடிக்க கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.இந்தப் பேய் என்னை சாப்பிட்டு விடுவானா என்பது தான் அப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.

©Ramya V
  part 5 horror story Tamil

part 5 horror story Tamil #திகில்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

part  4
அந்த அமைதியான இடத்தில திடீரென்று சப்தம் வந்தால் யார் தான் பயப்படாமல் இருப்பார்கள் நான் மீண்டும் அந்த நாற்காலி அருகே சென்றேன் அங்கு யாரோ ஒருவர் படுத்து இருக்கும் மாதிரி தான் எனக்கு தோன்றியது.

என் நெஞ்சம் படபட வென்று அடிக்க நான் மெல்ல ஒவ்வொரு அடியை எடுத்து வைத்தேன் சுவரில் எல்லாம் ரத்தம் சிந்திக் கிடந்தது நான் அந்த நாற்காலி அருகில் சென்று அந்த போர்த்தி இருந்த துணியை விளக்கினேன்.

அங்கே ஒரு கூடை இருந்தது அதனுள் ஒரு ஆடுகுட்டியின் தலையும் கடித்து குதறிய நிலையில் அதனுடைய உடலும் இருந்தது.

சத்தமாக அலறி விட்டேன். அந்த கூடையை ஒரு பக்கம் தூக்கி வீச அந்த கூடையில் இருந்து ரத்தம் சிந்தி ஆட்டின் தலை ஒரு மூலையில் சென்று விழுந்தது

அது வரையில் தைரியமாக இருந்த நான் இப்பொழுது கதிகலங்கி யானை இடம் இருந்து என் உயிரை காப்பற்றிக் கொள்ள நினைத்து இப்படி ஒரு அமானுஸ்ய வீட்டிற்குள் நுழைந்து விட்டேனே என்று ஒரு நொடி நான் என்னையே திட்டிக் கொண்டேன்.

சரி இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க கூடாது அப்படியே வெளியே சென்று விடலாம் என்று பின்னால் திரும்ப அங்கு பெரிய கோர முகத்தோடு ஒருவன் நின்று இருந்தான்.

©Ramya V
  part 4 horror story tamil

part 4 horror story tamil #திகில்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

part 3இவ்ளோ பெரிய வீட்டை யார் பராமரிக்கிறார்கள் யார் தான் உள்ளே இருகிறார்கள் அதுவும் இப்படியான ஒரு காட்டின் நடுவே என்று சந்தேகத்துடன் மெல்ல அந்த வீட்டின் பக்கம் திரும்பி அதனுடைய கதவை பார்த்தேன் கதவே மிகவும் பயங்கரமாக இருந்தது.

அந்த கதவருகில் சென்று தட்டலாம் என்று கை வைக்க கதவை போர்த்திய படி தூசி. ஏதோ ரத்த வாடையும் வீசியது. இதுவரை யாரும் வராத இடம் போல இருக்கிறது.

என்ன இது குடலை புரட்டுகிற நாத்தம் என்ற குழப்பத்துடன் அந்த கதவை லேசாக தள்ளி உள்ளே நுழைந்தேன்

உள்ளே பெரிய அரண்மனை போல இருந்தது உள்ளே யாரும் இல்லை என்று தான் நெனைக்கிறேன் எல்லா பொருட்களும் உபயோகிக்காமல் தூசி படர்ந்து இருந்தது.

பெரிய பெரிய அறைகள் மேலே தெரிந்த வானுயர்ந்த விளக்குகளும் என்னை பயமுறுத்தியது ஏதோ ஆர்வக் கோளாறாக உள்ளே நுழைந்தது தவறோ என்ற எண்ணம் ஒரு கணம் மின்னி மறைந்தது.

நான் உள்ளே செல்ல அங்கு ஒரு நாற்காலி நீளமான ஒரு போர்வையால் போர்த்தப்பட்டு இருந்தது. எல்லாம் தூசி படந்து பழைய பொருட்களாய் இருந்த நேரத்தில் அந்த போர்வை மட்டும் புதிதாக இருந்தது.

தூசி ஏதுமின்றி இருந்ததால் சந்தேகத்துடன் அருகில் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்த வேலையில் திடீரென்று கடிகார முள் ஒடுகிற சத்தம் கேட்ட து.
தொடரும்.,...

©Ramya V
  part 3 horror story tamil

part 3 horror story tamil #திகில்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

part 2 அவ்வப்போது கேட்கும் சில விலங்குகளின் சப்தங்கள் எங்களை பயமுறுத்த தான் செய்தது தூரத்தில் ஓடும் தண்ணீர் சப்தம் என்று , பறவைகளின் கீச்சிடும் குரல்கள் என்று அந்த காட்டில் எல்லாமே ரசிக்கும் படியாக இருந்தது.

அன்றைய தினம் எல்லாம் பார்த்து விட்டு திரும்பி பார்த்து விட்டு திரும்பும் பொழுது ஒற்றை கொம்புடன் ஒரு மிகப் பெரிய யானை எங்களை நோக்கி வந்தது அது வானை நோக்கி பிளிற எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்

ஒன்றாய் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓட அந்த யானை என்னை துரத்த ஆரம்பித்தது.உயிர் பயத்தில் அங்கிருந்து சென்றால் போதும் என்கிற ஒரே எண்ணத்தில் நான் காட்டிலிருந்த ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

உள்ளே செல்லச் செல்ல அது பெரிய பங்களா என்று விளங்கியது. என் நண்பர்கள் யாராவது வருகிறார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற சந்தேகத்துடன் அந்த பெரிய பங்களாவின் வாசலில் உட்கார்ந்து இருந்தேன்   தொடரும்.......

©Ramya V part 2 horror story tamil

part 2 horror story tamil #திகில்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

படிப்பவர்களின் ரத்தத்தை குடிக்கும் ரத்தக்காட்டேரி!! - இது ஒரு உண்மைக் கதை!!

By RAMYA V

நான் எங்கும் இதுவரை தனியாக சென்றது கிடையாது யாரவது கூட வரவேண்டும் அப்பொழுது தான் செல்வேன் சமீபத்தில் நான் தனியாக சென்று ரத்தம் குடிக்கும் காட்டேரியிடம் மாட்டிக் கொண்டதன் விளைவு தான் இது
விடுமுறையை கழிப்பதற்கான நண்பர்களுடன் சேர்ந்து அட்வென்ச்சர் ட்ராவல் செய்யச் சென்ற ஊரில் தான் இந்த அனுபவம் பயங்கரமான காட்டில் இரண்டு நாட்கள் பயணம். அந்த பயங்கரமான காட்டில் சூரிய ஒளியே உள்ளே வராமல் ஓங்கி உயர்ந்த மரங்கள் தான் நிறைய இருந்தன. மனிதர்களின் காலடிப் படாத அந்த இடத்தில் வேர்களை பின்னிப் பிணைந்து வெளிப்புரமாகவே ஊடுருவியிருந்தது. பச்சை இலைகள், காய்ந்த சரகுகள் குவியலாய் கிடந்தது...
தொடரும்...........

©Ramya V
  horror story tamil

horror story tamil #திகில்

4f9f14ae4734eab586226f1e9d47e09c

Ramya V

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...

©Ramya V sivan


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile