Nojoto: Largest Storytelling Platform
arunkalaiarasan1472
  • 69Stories
  • 2Followers
  • 0Love
    0Views

Arun Kalaiarasan

  • Popular
  • Latest
  • Video
a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

யவரும் இல்லையோ எனை ரசிக்கும்படி வாழ்ந்திட...
யாரும் இல்லையோ இவன் காதல் நிறைவடைந்திட....
இனியேனும் மனம் திருந்துமோ...?
தனி வாழ்வு புகுந்திடுமோ....?
ஒரு காயம் தாங்கியதால் 
மறு காயம் சிறிதாகுமா?
விரல் இடுக்கில் கண்ட வாழ்வினை
விரல் சொடுக்கில் தொலத்தேனே....
பரவசம் நிறைந்த வாழ்வினை
பிறர்வசம் சேர்த்து கலைத்தேனே....
இனியேனும் மாறிடு மனமே......!
மண்ணில் இல்லை உனை நேசிக்கும் ஓர் நபர்......😭😭😭

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

"இயல் இசை நாடகமாம்
முத்தமிழும் ஒர்வீட்டில் ஒன்றாய் வாழும் ஓரகத்தி போலும்...
இயல் என்ற மூத்தார் துணைக்கொண்டு வாழ பழகியவர்கள்.....
மூத்தார் நிலையை மறந்தார்களே
இசையும் நாடகமும் புது வாழ்வு தேடி போக புதுவடிவம் பூண ...
இயல் இன்னும் ஐ.சி.யூ வில் இருக்கிறது... 
பேச்சாளர்கள் தரும் சிகிச்சையினால்
சிருக்கி இன்னும் இருக்கிறாள்
இயல் இல்லாமல் போனால் தன்வாழ்வும்  ரனமாகும் என உணர மறந்த ஓரகத்திகள்..... "

நெடுந்தொடர் விரைவில் சுபமாய் முடியும் 
என்று காத்திருக்கும் நான்....

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

மடி அமர்ந்து மார்ப்பணைத்து,
இதழ் உறிஞ்சும் வேளையிலே,
பாதை மாற்றி குருதி,
மையம் விரை(றை)யுதம்மா....
கழுத்தோடு தேன் சாறாய் வியர்வை துளியிருக்க,
முத்தம் இட்டாள்(ல்), மூளைக்குள் முன்னூறு மின்னலம்மா...
நக கீறல் முதுகில் ரனமானாலும்,
உன் முகக் கோணம் காண மீமிகு இன்பமோ இன்பமம்மா...
விசைக் கூட்டி, முனங்கிடவே, வில்லென
வளைந்தப் போது,
உயிர் அம்பு ஏய்திட, உஸ்சன் தீர, 
உரசிக் களிப்போம் இரவினையே

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

வெறும் பெயரென இருந்த் எண்கள்,
இன்று புதிதாய் ஒலி எழுப்பும்.
சற்றும் கண்டுகொள்ளா நபர் இன்று
சுற்றம் நலம் வாழ வாழ்த்துவார்
நாடக மேடையில் வாழ்பவர் உண்டு
வாழ்க்கை பாதையில் நடிப்பவர் உண்டு
புதிதாய் பொய் வாழ்வை கண்டு
விந்தை மனம் பயந்ததும் உண்டு
அலட்சியம் செய்வோர் உண்டு
அதிகாரம் செய்வோர் உண்டு
அன்பு கொண்ட பல பேர் 
அயல தூக்கி எரிந்ததும் உண்டு
என்றோ பிறந்ததினால் தான்
இன்று இங்கனம் நபர்களை கண்டேன்...
இருப்பினும், இந்நாளில் எந்நாளும் என்னோடு வரும் 
நண்பர்களை காண்பதில் இனிதாகிறது...

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

அறியாத வானம் நின் மனம்,
அதிலே பறக்க நினைக்கும் நான்.
சிறகுகள் விரிக்கயில்,
சிரித்து சிறையிடாதே.
இயற்கை அழகாய் நின் முகம்,
இயற்கைக்கு அழகாய் நீ.
ரசிக்க காத்திருக்கிறேன்..... 
கண்ணம் தாங்கி காதல் செய்ய..... 
பேரழகு நின்னை கண்ட மட்டும்,
யாதுமே பொய்யானது ஏனோ?
உன் விழி பேசும் வார்த்தை கொண்டு,
அகராதி எழுத மனம் மய்யல் கொள்ளும்.
நின் வளைவுகளில் 
என் வரலாறு முடியவே
வாழ்ந்துடுவேன் வெந்நிலவோடு.....

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

யாரேனும் எண்ணுவாரோ? 
யவரேனும் ஏசுவாரோ?
என்னிடம் வருவதில்லை
வருபவர் நிலைப்பதில்லை.
நேற்று வந்த நீ, இன்று பேசும் நீ
நாளை விடுபட நினைப்பதை 
நான் அறிவேன்.
உள்மன பாசம்தனை
 கண்கள் காட்டும் என்பர்
கண்ணோடு மட்டும் பாசம் வைத்து
பார்வை விலகிட வேசம் கலைத்திட்டாய்
உண்மை உறவும் உலகில் உண்டோ
சொந்தம் என கூறும்
வாழ்வும் எனக்குண்டோ???

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

சில நாட்கள் பழகிடினும், பல மனதை திருடுகிறாய்.
திறம்பட பெண்களிடம் ரசனையாய் உருட்டுகிறாய்.
தரமாக குழந்தைப்போல் கோபமும் கொள்கின்றாய்.
பணிவு கொண்டு பேசிடவே,
நிலவின் குளிர்  காட்டுகிறாய்.
சுற்றம் சிரித்து மகிழ்ந்திடவே,
நகை நயம் பேசுகிறாய்.
அச்சம் என்ற வார்த்தையை
அகராதி விடுத்து நீக்குகிறாய்.
உச்சம் தொட வாழ்ந்திடவே,
வெற்றிகள் நின்னை சேர்ந்திடுமே...
நேற்றெனும் காலம் பாடமாக
நாளை வாழ்வு கனவாக
இன்று என்றும் சுகமாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

உன் குரல் கேட்பதற்கும்
உன் அருகில் வாழ்வதற்கும் 
என் மனம் விரும்பவில்லை
எனக்கொன்றும் ஆசையில்லை.
ஓசை மட்டும் போதுமா?
அருகில் பிரிய முடியுமா?
என்னவளாய் நீ வரவே
என் காதல் காத்திருக்கும்.
விண்ணில் உள்ள விண்மீன் பிடித்து
உன் உடலை அலங்கரிக்கும்
கண்ணில் வரும் கண்ணீரையும்
முத்தென்று மாற்றி வைக்கும்

என் வாழ்வு முடிய உன் மடி
நான் வாழ நின் மனம்
இரண்டு மட்டும் கொடுத்திடு
என் இதயத்தை எடுத்திடு
வாழ்வு அனைத்தும் உன்னுடன்
வாழ்ந்தப் பின்னர் மண்ணுடன்
மண்ணோடு போகும் மட்டும் 
என்னோடு வாராயோ???
வெந்மதியே

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

இசை பாடி இருதயம் வெல்பவளே..
இயந்திரமும் காதல் கொள்ளும் பேரழகே
குழந்தை சிரிப்பினில் இறைவனை
காண்போம் என்பார்கள்....
உன் குவளை சிரிப்பை இறைவனே 
காண்பான் காத்திருந்து...
கானம் பாடுகயில் நீ உன்னை மறப்பாய்...
சுற்றி நிகழ்வது உனக்கு தெரியா வண்ணம்
கானம்தனில் கலந்திருப்பாய்..
நீ பாடுகயில் நிகழ்வதை உரைகிறேன்
மயில் ஆட முகில் ஒடி நின் பாட்டை 
ஒலிப் பதிவு செய்யும்
புது பூவோரம்  தேனும் சுரக்கும்...
கை தட்ட கடல் அலைகள்
கரையை மோதும்
காற்றும் கேட்டு அதை நின் காதில் பாடும்.
காற்றோடு கலந்த வார்த்தைகள் எல்லாம் 
முக்தி அடைந்து மோட்சம் பெரும்.
உன் பாட்டோடு வாழ்வதற்கே 
கவிதைகளும் தவம் இருக்கும்...
உன்னால் கண்ட இன்பத்தினால் 
இவை யாவும் உனக்காக உரைக்கின்ற 
ஒருப்பாட்டுக் கவியாக..
நன் என்று வாழ்கவே..... 
நீ என்றும் நன் என்று வாழ்கவே.....

a2a1ace7c1fe6d8b5d949c2eee5a05fc

Arun Kalaiarasan

வெறும் ஒற்றை சொல்லென உன் அன்பை கூறிட
நறுமுகை தமிழில் வார்த்தையும் உண்டோ.....? 
சேரும் எழுத்துக்கள் வார்த்தைக் கோர்த்திட,
உயிரும் மெய்யுமாய்  உழைத்திடுமோ....?
அல்ல, அது இன் இன்றி நிகழ்ந்திடுமோ....?
தல்லை மனதினை தமிழும் அறிந்தனவோ....? சேர்ந்தனவோ...?
சொல்லை கோர்த்திட பிள்ளையாய் பயின்றிடுமோ......?
'அம்மா' என உனை அழைக்க 
தமிழ் தவழ்ந்து கொஞ்சிடுமோ??......

loader
Home
Explore
Events
Notification
Profile