கோபம் 04
காலை டிபன் சாப்பிட வந்து அமர்ந்தாள் சுரையா. இன்று அவளுக்கு பிடித்த உணவை சமைத்து வைத்திருந்தார் அவள் தாய். அதை பார்த்தவுடன் இவளுக்கு ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு இருந்தாள். பிறகு நினைவுக்கு வந்தது. இன்று அவள் முதல் மாதம் சம்பளம் வாங்கும் நாளென்று. ஓஹோ இதுக்கு தானா என்று அவள் ரஸியாவிடம் என்ன ரஸியா இன்னிக்கு எனக்கு சம்பளம் தர நாளுன்னு தானே எனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சிருக்காங்க ம்ம்ம்? என்றவுடன் சற்றே அதிர்ந்தனர் அம்மாவும் அப்பாவும். இவள் #story