தமிழைக் காப்பதையும் வளர்ப்பதையும் தலைசிறந்தோர் பலர் கடமையாகக் கொண்டனர். தமிழைத் தத்தெடுத்தும் சிலர் தங்கள் மொழியில் சிறப்பினை சேர்த்தனர். என் பங்கிற்கும் என் தாய் தமிழுக்குப் பணியாற்ற என் முதல் கவிதையின் தலைப்பாய் தலைமையாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்... நம் அறியாமை என்னும் இருளை அகற்றும் சோதிச்சுடரான தமிழுக்கு அந்த ஈசனை போலவே ஆதியும் கண்டறியப்படவில்லை அந்தமும் நிர்ணயிக்கப்படவில்லை! தனது முதுமையை தொன்மை என்ற பெயரில் மறைத்து இன்றும் இளமையோடு இருக்கும் தமிழ் அன்னையாவது தன் வயதினை அறிவாளோ? அறிவதற்கு அரியவளாம் என் அன்னை தமிழ் அவளை அறிந்தால் அனைவருக்கும் இன்பம் தருபவளாம் இனியவளாம் மொழிகளில் இம்மூத்த மகள்..! #thirdquote#அன்னை தமிழ் ❤️