பார் அளிக்கும் பட்டங்கள்!!! அன்பு காட்டிய எனக்கு -இந்த அகிலம் அளித்த பட்டம் அப்பாவி ! அமைதியாய் இருக்கும் எனக்கு சிலர் அளித்த பட்டம் பயந்தான்கோழி! இறக்கம் காட்டிய எனக்கு இந்த பாழும் உலகம் கொடுத்த பட்டம் இளிச்சவாயன் ! வேண்டாம் வீண் வம்பு என்று விலகிப்போன எனக்கு -சில வீணர்கள் அளித்த பட்டம் கோழை ! இப்படி பட்டங்களை வாரி வழங்கும் மனிதர்களுக்கு எத்தனை பெரும் மனசு! நினைத்தாலே சிரிப்பு வருகிறது ஹூம் .சிரிக்க மாட்டேன் பிறகு இதற்கும் பட்டம் கட்டி விடுவார்கள் பைத்தியக்காரன் என்று ! இவண் இரா. பாக்கியராஜ் பட்டம் பற்றி கவிதை