இளசுகள், சுரண்டல்களை(உடல் சுரண்டல்) விட்டு தப்பிக்க என்ன செய்வது என்று கதரி மேலே பார்த்தால் தென்படுவது எப்போதும் மின்விசிரியும், கையில் கிடைப்பது எப்போதும் அம்மாவின் புடவையுமாயே இருக்கிறது! அம்மா புடவையில் தூங்குவது சுகமென அறிவேன், தொங்குவதும் சுகமோ சிறுசுகளே! மனம் கசக்கிறது உங்கள் கடிதகளை படிக்கும் போது! ராசாக்களே, ராஜ்ஜாத்திகளே, துணிவுகொள்ளுங்களேன்!! மீண்டு வாங்களேன்! தாண்டி ஓடுங்களேன்! எதிர்த்து நில்லுங்களேன்!! வாத்தியார்களே, கொலைகாரர்களே, கனவுகளை சிதைக்கும் இதயமில்லாமல் வேலை செய்யும் இயந்திரங்களே, கண்டும் காணாமல் உடன் வேலை செய்யும் மனசாட்சி செத்தவர்களே, வெட்கப்படாமல் அட்வைஸ் செய்யும் ஆழுமைகளே, பெரியவர்களே வணக்கம். பிஞ்சுகளை நசுக்கும் உங்கள் விரல்களுக்குள் இடையில் சாக்பீஸ் எதற்கு? மனம் பிரண்டு அழையும் உங்களுக்கு பிஞ்சுகளை திருத்தும் ஆசிரியர் வேலை, என்ன கொடுமை! ஒரு சமூகம் அதன் பெண்களையும், பிள்ளைகளையும் எப்படி கனப்படுத்துகிறதோ, அது தான் அதன் உண்மையான ஆன்மா. தமிழக ஆன்மா, ஏன் உலகத்தின் ஆன்மாவே என்றோ செத்துக்கிடக்கு. சமூகமாய் உணர்வு பெறுவோம்! செத்துப்போன சமூக மனதிற்கு உயிர் கொடுங்க இயேசுவே, உயிர் கொடுங்க! உணர்வு கொடுங்க இயேசுவே! உணர்வு கொடுங்க! #உடல்_சுரண்டல் #உடல் #சுரண்டல் #இளசுகள் #பெண்_குழந்தை #மாணவர்கள் #ஆசிரியர்களே_பெற்றோர்களே #posco