Nojoto: Largest Storytelling Platform

பகுதி-2 மர்ம வீடு.....☠️ பெரியசாமியின் நண்பர்

பகுதி-2     மர்ம வீடு.....☠️
பெரியசாமியின் நண்பர் தனக்குத் தெரிந்த ஒரு காண்ட்ராக்டர் இருப்பதாகக் கூறினார்.அவரிடம் பேசி அவர் ஒத்துக்கொண்டால் வீட்டுக்கு வரசொல்லுங்கள் மற்ற விஷயங்களை நான் பேசிக் கொள்கிறேன் என்றார் பெரியசாமி.அந்த நண்பரும் அந்த காண்ட்ராக்டரிடம் பேசினார்.அவரும் ஒத்துக்கொண்டார்.வீட்டுமுகவரியைச் சொல்லிப் போக சொன்னார் அந்த நண்பர்.மறுநாள் காலையில் பெரியசாமி அந்தப் பெரிய வீட்டைப் பார்க்க சென்றுவிட்டார்.பெரியசாமியின் மனைவியோ "இந்த மனுசனுக்கு வேற வேலையே இல்லை எப்பப்பாரு காலையில எழுந்திருக்க வேண்டியது அந்த வீட்டு முன்னாடிபோய் நிற்க வேண்டியது.
கல்யாண வேலை எத்தன வேலை இருக்கு அதலாம் பாக்காம போயிட்டாரு அந்த வீட்டப் பார்க்க வரட்டும் இன்னைக்கு கேட்காம விடமாட்டேன் .அந்த வீட்ட விற்க முடியுமா? முடியாதுனு? இன்னைக்கு கேட்டேத்தீருவேன்" என்று முனகிக் கொண்டு இருந்தாள்.அந்த காண்ட்ராக்டர் பெரியசாமியின் வீட்டுக்கு வந்தார். "ஐயா" என்ற சத்தம் வாசலில் கேட்டது.பெரியசாமியின் மனைவி வெளியே வந்தாள்."அம்மா பெரியசாமி ஐயா இருக்காறா நான் அவரப் பார்க்கனும்" என்றார். "அவர் கொஞ்சம் வெளியப் போய்ருக்காரு இப்போ வந்துடுவார் நீங்க வந்து உக்காருங்க" என்று சொல்லி அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஐயா நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள்.
                     - மர்மம் தொடரும்       Surya kalaivani
பகுதி-2     மர்ம வீடு.....☠️
பெரியசாமியின் நண்பர் தனக்குத் தெரிந்த ஒரு காண்ட்ராக்டர் இருப்பதாகக் கூறினார்.அவரிடம் பேசி அவர் ஒத்துக்கொண்டால் வீட்டுக்கு வரசொல்லுங்கள் மற்ற விஷயங்களை நான் பேசிக் கொள்கிறேன் என்றார் பெரியசாமி.அந்த நண்பரும் அந்த காண்ட்ராக்டரிடம் பேசினார்.அவரும் ஒத்துக்கொண்டார்.வீட்டுமுகவரியைச் சொல்லிப் போக சொன்னார் அந்த நண்பர்.மறுநாள் காலையில் பெரியசாமி அந்தப் பெரிய வீட்டைப் பார்க்க சென்றுவிட்டார்.பெரியசாமியின் மனைவியோ "இந்த மனுசனுக்கு வேற வேலையே இல்லை எப்பப்பாரு காலையில எழுந்திருக்க வேண்டியது அந்த வீட்டு முன்னாடிபோய் நிற்க வேண்டியது.
கல்யாண வேலை எத்தன வேலை இருக்கு அதலாம் பாக்காம போயிட்டாரு அந்த வீட்டப் பார்க்க வரட்டும் இன்னைக்கு கேட்காம விடமாட்டேன் .அந்த வீட்ட விற்க முடியுமா? முடியாதுனு? இன்னைக்கு கேட்டேத்தீருவேன்" என்று முனகிக் கொண்டு இருந்தாள்.அந்த காண்ட்ராக்டர் பெரியசாமியின் வீட்டுக்கு வந்தார். "ஐயா" என்ற சத்தம் வாசலில் கேட்டது.பெரியசாமியின் மனைவி வெளியே வந்தாள்."அம்மா பெரியசாமி ஐயா இருக்காறா நான் அவரப் பார்க்கனும்" என்றார். "அவர் கொஞ்சம் வெளியப் போய்ருக்காரு இப்போ வந்துடுவார் நீங்க வந்து உக்காருங்க" என்று சொல்லி அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஐயா நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள்.
                     - மர்மம் தொடரும்       Surya kalaivani