Nojoto: Largest Storytelling Platform

ஆலமரம் அசைந்தாடி அழைக்கின்றன தென்றல் காற்று மிருது

ஆலமரம் அசைந்தாடி அழைக்கின்றன
தென்றல் காற்று மிருதுவாய் தழுவுகின்றன
கோயில் கோபுரம் உயரத்தில் ஆசிர்வதிகின்றன

என்னைத் தாலாட்டி வளர்த்த தறி ஓசை
என்னை ஆரவாரத்தோடு வரவேற்கின்றன

வீட்டுக்கு வீடு பந்தமாய் ஊரே சொந்தமாய்
பால்க்காரர் முதல் மளிகைக் கடைக்காரர் வரை
அண்ணா அக்கா மாமா என உறவுகளாய்

ஒவ்வொரு எட்டுக்கும் எட்டு திக்கிலிருந்து
உவகையுடன் விசாரிப்புகளோடு வரவேற்க 
மண்ணின் வாசனையோடு  தென்றல் தழுவ

என் கால்கள் முன்னேறி நடக்க
என் நினைவுகள் பின்னோக்கி நடக்கின்றன 

வயல்வெளி நான் வளர்ந்த கதைகளை பேசிற்று
வீதிகள் விளையாடிய நாட்களை நினைவூற்றிற்று
மைதானம் என்னுடனான தோழர்களை தேடிற்றுற்று
பள்ளி என் பருவ காலங்களைப் பறைசாற்றிற்று

இவ்வாறான பசுமையான நினைவுகளில்
குதூகலிக்கும் நான் !!!
மீண்டு வந்த நானாகிய நான் !!!

சொர்க்கமே என்றாலும் அது
சொந்த ஊர்ப் போல வருமா ….!!!!

                                    - ஜீவந் 
 #என்ஊர் #ஜீவந் #தமிழ்கவிதைகள் #tamilquotes
ஆலமரம் அசைந்தாடி அழைக்கின்றன
தென்றல் காற்று மிருதுவாய் தழுவுகின்றன
கோயில் கோபுரம் உயரத்தில் ஆசிர்வதிகின்றன

என்னைத் தாலாட்டி வளர்த்த தறி ஓசை
என்னை ஆரவாரத்தோடு வரவேற்கின்றன

வீட்டுக்கு வீடு பந்தமாய் ஊரே சொந்தமாய்
பால்க்காரர் முதல் மளிகைக் கடைக்காரர் வரை
அண்ணா அக்கா மாமா என உறவுகளாய்

ஒவ்வொரு எட்டுக்கும் எட்டு திக்கிலிருந்து
உவகையுடன் விசாரிப்புகளோடு வரவேற்க 
மண்ணின் வாசனையோடு  தென்றல் தழுவ

என் கால்கள் முன்னேறி நடக்க
என் நினைவுகள் பின்னோக்கி நடக்கின்றன 

வயல்வெளி நான் வளர்ந்த கதைகளை பேசிற்று
வீதிகள் விளையாடிய நாட்களை நினைவூற்றிற்று
மைதானம் என்னுடனான தோழர்களை தேடிற்றுற்று
பள்ளி என் பருவ காலங்களைப் பறைசாற்றிற்று

இவ்வாறான பசுமையான நினைவுகளில்
குதூகலிக்கும் நான் !!!
மீண்டு வந்த நானாகிய நான் !!!

சொர்க்கமே என்றாலும் அது
சொந்த ஊர்ப் போல வருமா ….!!!!

                                    - ஜீவந் 
 #என்ஊர் #ஜீவந் #தமிழ்கவிதைகள் #tamilquotes