Nojoto: Largest Storytelling Platform

🙏மரம் நட போகிறீர்களா? ஒரு நிமிடம் இதை தாங்கள் மு

🙏மரம் நட போகிறீர்களா? ஒரு நிமிடம் இதை தாங்கள்  முழுவதும்  படிக்க வேண்டும்  🙏

💕🙏இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மரக்கன்று நடுகிற நண்பர்களுக்கு பகிருங்கள். தக்கலை நெய்தல் இயற்கை அங்காடி வாட்சப் குழுவில் வந்த பதிவு🙏💕

🙏மழைக்காலம் தொடங்குவதால் பொது இடங்களில் மரம் நடும் நண்பர்கள் நாட்டு ரக💕 மாமரம், நாவல்மரம், வாதுமை, புளியமரம் போன்று பழங்கள் கிடைக்கிற பழமரங்களை தேர்ந்தெடுத்து நட வேண்டுகிறோம், இதனால் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் உணவு கிடைக்கும். ஒட்டு ரக 😂 மரங்கள் தவிர்த்து நாட்டுரக மரங்கள் நடுவோம். நாட்டு மரங்களின் விதைகள் நல்ல முழுவேக இயற்கை  முளைப்பு திறனுடன் இருக்கும். நாட்டு ரக பழங்கள் நமது உடல்  ஆரோக்கியத்துக்கும் மிகவும்  நல்லது 🙏

🙏பொது இடங்களில் மரம் நடும் போது சின்னஞ்சிறிய  கன்றுகளை நட்டு நாம்  பராமரிப்பது அவைகளை  சாத்தியமில்லை ! அதனால் கன்றுகள் பட்டுப்போகும்.😭 எனவே நாம்  4- 5 அடிக்கு மேல் வளர்ந்த நல்ல மரக்கன்றுகளை நடவேண்டும். அதிகம் பராமரிப்பு தேவைப்படாது. எளிதில் வளர்ந்துவிடும்🙏

💕🙏சுவர்கள், குளக்கரைகள், கட்டிடங்களில் இருந்து குறைந்தபட்சம் 4 அடி இடைவெளி விட்டு நடுவது எப்போதும் மிக நல்லது.
மின்கம்பிகள் போகும் வழியில் நட்டால் வளரும்போது அந்த  மரத்தின் கிளைகள் மின் கம்பிகளை தொடாதவாறு கிளைகளை நாமே நன்கு  வெட்டி விட வேண்டும் மின்வாரிய ஊழியர்கள் வெட்டினால் மரம் வளராதவாறு வெட்டி விடுவார்கள்.  அல்லது நம்மால் பராமரிக்க முடியாத சூழலில் மின்கம்பிகளுக்கு கீழே மட்டும்  நட கூடாது.🙏💕

💕நமக்கான முதல்தர உணவு கனிகள்தான்!💕

🙏அரசும் மீடியாவும் வேறு  பிரபலங்களும்...மரம் நிழல் தரும், 😎காற்று தரும்,😭 மழை தரும்னு🤣 சொல்லுவாங்க...🙏

 💕ஆனா கனி தரும்னு மட்டும் சொல்லவே மாட்டார்கள் ஏன்?💕

🤗இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசு பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களை கவனியுங்கள்.... அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.
ஏன்?  ப,,,ண,,,,ம் 🤗

😂எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்த சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன்! என்று அரசு அந்த புளிய மரங்களை வெட்டிவிடும். விரிவாக்கத்திற்கு பின் வெத்து மரங்களையே நடும். 😂

😎அரசும் தொண்டு நிறுவனங்களும் வெத்து மரங்களை மட்டுமே நடும்.😎

💕 கொரானா (Lock down ) காலங்களில் பல ஆயிரம் மக்கள்   பல கிலோமீட்டர் ரோட்டில் பசியோடு நடந்து சென்றனர். அப்பொழுதும் கூட அந்த மக்கள் காய் கனி மரங்கள் இருந்தால் நமது  பசிக்கு உணவாகுமே என சிந்திக்கவில்லை.😜

🤣எனக்கு தெரிந்து ... ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.🤣

😭நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முக்கிய உணவே  நமக்கு பழம் தானே. ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 😂
மா பலா நாவல் அத்தி கொய்யா.... என்று எத்தனை மரங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன்  மீண்டும்  நடப்படவில்லை. நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.😭

காரணம்
MMMC: mass media mind control.

🙏மரம் கனி தரும் என்ற வார்த்தையை எல்லா விதத்திலும் மறைத்தனர். தொடர்ந்து மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்.... அதை மட்டுமே மனிதர்களும் நினைத்து கனியை மறந்தான்.🙏

💕கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .💕

🤩ஆனால் இதையெல்லாம் தடுத்து கார்பரேட் ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது. அதையெல்லாம் ஏதோ ராயல் ஃபேமிலி போல ஸ்டைலா வாங்கி தின்னு உடம்பு சர்வநாசமா போனது தான் மிச்சம். கார்பரேட்டுக்கோ ஏகபோக ! லாபம்.🤩

🤑நல்லா புரிஞ்சிக்குங்க இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்று விட கூடாது என்று கார்பரேட் தெளிவா செயல்படுகிறது 😜.

🙏பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.🙏

🤗அதை முழு முற்றாக தடுத்து பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும் என்ற நிலையை இன்று  உருவாக்குகிறது கார்பரேட்..கம்பெனி 🤗

💕நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் நாட்டு ரக மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே சொர்க்கமாக காட்சி அளிக்கும். தை மாதங்களில் பூத்து குலுங்கும். உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இங்கு  இருக்காது.
நமது மனநிலையே ஆனந்தமாக இருக்கும் . உண்மையான சொர்க்கத்தை நாம் அனுபவிக்கலாம். நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்.!.💕

🤣அப்பொழுது உங்களுக்கு தெரிவது எல்லாம் கிரிக்கெட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியும் தான். நாம் 
ஒரு சொர்க்க பூமியை இப்படி நரகமாக்கிவிட்டு ரேசன் கடையில் இப்போது  புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.😎

😭மீடியாக்கள் சொல்வது மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம். மீடியாக்கள் ஒட்டுமொத்த உண்மையை மறைத்துள்ளது.😭

🤩மீடியா ஒரு ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.🤩

🙏கார்பரேட் அறிவாளிகள்  கிடையாது  ! நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.! 🙏 

💕மனிதர்கள்  சிந்திக்காதவரை இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.💕

🙏வாருங்கள் மக்கள்  சிந்தனை யில் 
மாற்றம் வரும்வரை பகிர்ந்துகொண்டே இருப்போம்  பகிருங்கள்🙏

©Poornima Poorni
  #tree # nature