நலமாக இருக்கிறேன் என்று...! காரணம் தேடி கை விட்டவர்கள் கஷ்டப்பட வேண்டாம்:-நான் நஷ்டப்பட்டு போய் விடுவேன் என்று! நலமுடன் தான் இருக்கிறேன்! அங்கும் இதையே வேண்டுகிறேன்! விரோதம் பாவிப்பதற்கு.. குரோதம் பழகவில்லை அதனால்.. துரோகம் செய்வதில்லை நானும்! விரும்பியது விரும்பியதாகவே இருந்துவிட்டு போகட்டும்: தோற்றுப்போனதாய் எண்ணிக் கொள்ளவில்லை; இனிவரும் நாட்களில் என் ஏற்றத்தில் யாரும் தோற்றதை ஏற்றுக்கொள்ளும் இடையூறு நிகழாதிருப்பதே... என் நீடு நெடிய பிராத்தனை!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள்