Nojoto: Largest Storytelling Platform

கவிதை ✏️..எழுத...!! பெண்பிள்ளை அதிகம் பேசக்கூடாது

கவிதை ✏️..எழுத...!!

பெண்பிள்ளை அதிகம் பேசக்கூடாது என்ற அரசாணைக்குள் அகப்பட்ட கைதியாய் 
ஜித்தன் சிறைக்குள் சிக்கியிருந்த பருவத்தில் பேச முடியாது போன வார்த்தைகளை பேனா முனைக்கு  தூதனுப்பி என் இயலாமை இன்னல்களை எல்லாம்  காகிதத்தில் பதியம் போட்ட இளவயது சிநேகிதி
என் கவிதை காதலி! ஆற்றாமையில் சிந்தாத கண்ணீரின் சிதறாத வலிகளை வரிகளாக்கி உடலற்ற உருவமாய் உள்ளமதில் உறவாகிப் போனது! வலிகளுக்கு வந்த கவிதைகள் எல்லாம்  வாழ்க்கைக்கும்  வழித் துணையாய் இன்றுவரை என்னோடு பயணிக்கிறது!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari)
  #Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை

#Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை #சமூகம்

36 Views