Nojoto: Largest Storytelling Platform

பகுதி-3 மர்ம வீடு.☠️ காண்ட்ராக்ட்டர் தா

பகுதி-3 மர்ம வீடு.☠️            காண்ட்ராக்ட்டர் தான் வந்த விஷயத்தைப் பெரியசாமியின் மனைவியிடம் கூறினார்.பெரியசாமியின் மனைவியோ"மனுசன் வீட்ட விற்க முடிவெடுத்துட்டார் போல அதான் பெயின்ட்டடிக்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்காரு பரவாயில்ல எதுஎப்படியோ அந்த வீட்ட விற்றால் சரி" என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள்.அந்த நேரம்  பெரியசாமி வீட்டிற்க்கு வந்தார். உள்ளே நுழைந்ததும் "என்னங்க அந்த வீட்ட பெயின்ட்டடிக்க ஆள் வேணும்னு சொல்லியிருந்தீங்களாம் அதான் காண்ட்ராக்ட்டர் வந்திருக்கார்" என்றாள்.
சரி நீ போய் அவருக்குக் குடிக்க மோர் எடுத்துட்டு வா என்றார். ஐயா உங்களைப் பற்றி சொல்லுங்க என்று சொல்லி அமர்ந்தார் பெரியசாமி. ஐயா என் பெயர் உமையாலன்.நான் பக்கத்து ஊர்ல இருந்துவரேன் என்றார்."உமையாலன்" உங்க பெயர் ரொம்பப் புடிச்சிருக்கு என்றார் பெரியசாமி.ஐயா எங்க அப்பா முருகன் பக்தர் அதான் எனக்கு இந்தப் பெயர் வச்சாரு.நானும் ஒரு முருகன் பக்தன்.என்கிட்ட பெருசா வேலையாட்கள் இல்லை.அஞ்சுப் பசங்க இருக்காங்க.இருபது வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட வேலைக்கு வந்து சேர்ந்தப் பசங்க.அப்பா அம்மா இல்லாம சாப்பட்டுக்குக்ககூட  வழியில்லாமக் கஷ்ட்டப்பட்டப் பசங்க.எனக்கு குழந்தைங்க இல்லை.எனக்கு எல்லாமே அந்தப் பசங்கதான்.அவங்க அஞ்சுப் பேருக்கும் முருகன் பேருதான் வச்சு என் புள்ளைங்கமாறி வளத்துட்டு இருக்கேன் என்றார்.-மர்மம் தொடரும்
 
                 Surya kalaivani
பகுதி-3 மர்ம வீடு.☠️            காண்ட்ராக்ட்டர் தான் வந்த விஷயத்தைப் பெரியசாமியின் மனைவியிடம் கூறினார்.பெரியசாமியின் மனைவியோ"மனுசன் வீட்ட விற்க முடிவெடுத்துட்டார் போல அதான் பெயின்ட்டடிக்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்காரு பரவாயில்ல எதுஎப்படியோ அந்த வீட்ட விற்றால் சரி" என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள்.அந்த நேரம்  பெரியசாமி வீட்டிற்க்கு வந்தார். உள்ளே நுழைந்ததும் "என்னங்க அந்த வீட்ட பெயின்ட்டடிக்க ஆள் வேணும்னு சொல்லியிருந்தீங்களாம் அதான் காண்ட்ராக்ட்டர் வந்திருக்கார்" என்றாள்.
சரி நீ போய் அவருக்குக் குடிக்க மோர் எடுத்துட்டு வா என்றார். ஐயா உங்களைப் பற்றி சொல்லுங்க என்று சொல்லி அமர்ந்தார் பெரியசாமி. ஐயா என் பெயர் உமையாலன்.நான் பக்கத்து ஊர்ல இருந்துவரேன் என்றார்."உமையாலன்" உங்க பெயர் ரொம்பப் புடிச்சிருக்கு என்றார் பெரியசாமி.ஐயா எங்க அப்பா முருகன் பக்தர் அதான் எனக்கு இந்தப் பெயர் வச்சாரு.நானும் ஒரு முருகன் பக்தன்.என்கிட்ட பெருசா வேலையாட்கள் இல்லை.அஞ்சுப் பசங்க இருக்காங்க.இருபது வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட வேலைக்கு வந்து சேர்ந்தப் பசங்க.அப்பா அம்மா இல்லாம சாப்பட்டுக்குக்ககூட  வழியில்லாமக் கஷ்ட்டப்பட்டப் பசங்க.எனக்கு குழந்தைங்க இல்லை.எனக்கு எல்லாமே அந்தப் பசங்கதான்.அவங்க அஞ்சுப் பேருக்கும் முருகன் பேருதான் வச்சு என் புள்ளைங்கமாறி வளத்துட்டு இருக்கேன் என்றார்.-மர்மம் தொடரும்
 
                 Surya kalaivani