பகுதி-1 மர்ம வீடு......☠️ பசுமையான அழகான ஊரில் பெரியசாமி என்றப் பணக்காரர் இருந்தார். அந்த ஊரில் உள்ள வாய்க்கால்,வரப்பு,தோட்டம்,தோப்பு அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர். அவருக்கு ஒரே மகள் அந்த மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெரிய வீடு ஒன்று இருந்தது.அந்த வீட்டை விற்க அவருக்கு மனம் இல்லை.அந்த வீடு பல வருடங்களாகப் பூட்டியே இருந்தது.அந்த வீட்டை சீரமைக்க நினைத்தார். அந்த வீட்டினால் ஏற்ப்பட்டப் பல சிக்கல்களால் அந்த வீட்டை ஊர்மககள் மர்ம வீடாகப் பார்த்தனர்.யாரேனும் வீடு கேட்டு வந்தால் கூட "அந்த பெரிய வீட்டைத் தவிற வேறு எந்த வீட்டை வேண்டுமென்றாலும் பாருங்கள்" என்றே கூறுவர்.இதனால் அந்த வீட்டிற்க்கு தங்குவதற்கு யாரும் வரவில்லை.பூட்டிய வீட்டைப் பல முறை சீரமைக்க முயன்றும் முடியவில்லை.ஏனெனில் அந்த வீட்டைப் பற்றி தெரிந்த உள்ளூர் பெயின்ட்டர்ஸ் யாரும் அந்த வீட்டை சீரமைக்க முன்வரவில்லை.வெளியூர் பெயின்டர்கள் சீரமைக்க முன்வந்தாலும் அந்த வீட்டைப் பற்றி ஊர்மக்கள் கூறும் கதையை கேட்டு தெறித்து ஒடிடுவர். இதனால் அந்த வீடு சீரமைக்கப்படாமல் பூட்டியே இருந்தது. மகளின் திருமணத்திற்க்காக சீரமைக்க நினைத்தார்.தனக்கு தெரிந்த நண்பரிடம் விஷயத்தைக் கூறினார். - மர்மம் தொடரும் Surya kalaivani