"சிவக்குமார் சார் நீங்களா?" என்றார் ஒருவர். இல்லை என்று மெல்ல தலை அசைத்தேன். எங்கள் கண்கள் சிவக்குமாரைத் தேடத் தொடங்கின. 777 பஸ் வந்ததும் நான் இருக்கையில் அமர்ந்துக் கொண்டேன். பஸ் புறப்பட தயாரானது. காதில் அலைபேசியை வைத்தவாறு ஒவ்வொரு இருக்கையாக சிவக்குமாரைத் தேடி கடந்து சென்றார் அவர். அன்று வராதவர் என்னுடனே பயணித்தார். இதோ இப்போதுதான் நான் அவரை இங்கு இறக்கிவிடுகிறேன். #பயணம் #தேடல்வாழ்க்கை