கடவுள் விற்பனைக்கு.. கலங்கிய கண்கள்.. சிதறிய குருதி.. விதிகளை வரையறுத்த இறைவனுக்கு விபரீதம் என்னவென்று தெரியாமல் போனது ஏனோ?? விடுமுறை கொண்டாட வந்தவர்கள் வீடு திரும்பாமல் போனது ஏனோ?? உயிர்த்தெழுந்த இறைவன் தன் உடனிருக்க உடன்பிறப்புக்களை கூட்டிச் சென்றான் போலும்..!! கற்சிலைக்குள் கடவுளை கண்ட மனிதம் கண்முன்னே காண மறந்து போனதோ..!! மதத்தின் பேரால் மனிதம் மரணம் அடைவதை கண்டு கடவுளின் மனமும் மறத்து போனதோ..!! வேண்டாம்.. இங்குள்ள சிலைகளை விற்பனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.. சிலை போல கடவுளும் விற்பனைக்கு இருந்தால் சொல்லுங்கள்..! #prayForSrilanka.. #renuWritings #RenuWrites