ஒரு பித்தனின் கவிதை காதல் ஒன்று கொண்டேன் மெய்யாக நான் கவிதை எழுத கண்டேன் இதுவரை எனக்கில்லாத கவி நயம் இப்பொழுது வந்தது ஏனோ! அதற்கு காரணம் நீதானோ! ஒளிர்ந்திடும் உன் திருமுகத்தைக் கண்டால் கவிதைகள் பொங்கி எழுகிறது! வார்த்தைகளால் உன்னை வர்ணித்து எழுதப்பட்ட மடல்களைப் பட்சிகளிடம் தூது விடுத்தேன்! பட்சிகளோ கடல் கடந்து,மலை கடந்து,காடுகள் கடந்து,மேகங்கள் பல கடந்து விண்ணிர்க்கு வந்தது,ஏனோ நட்சத்திரங்கள் தடுக்க மெய்யான காரணத்தை எனக்காகப் பட்சிகள் சொல்ல, காதலைப் புரிந்து கொண்ட நட்சத்திரங்கள் மடலை வாங்கி உன்னிடம் கொடுத்தது,வெண்ணிலவே உனக்காக நான் அடுத்த மடலை எழுதுகிறேன்! என் இரு மடலுக்கும் பதில் மடல் அனுப்புவாய் என்று காத்திருக்கிறேன் பூமியில் உனக்காக...... #நிலவு #மேகம் #இரவு #காதல் #கவிதை #பித்தன்#பட்சி #நட்சத்திரம்