White பயணிகள் தனது பேருந்து வரும் வரை காத்திருக்கும் அந்த பயணியர் இருக்கையில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் ஒரு இலையை போல... நான் இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்... எனை அழைக்க உரிமையுள்ள கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் எந்த திசையில் எனை தேடி அலைகிறாரோ நான் அறியேன்... அவர் வரும் வரை நான் இங்கே போவோர் வருவோரை ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை பார்த்து களிக்கிறேன் ... என் புன்னகையில் பரவசமடைந்த சிலர் சில இனிப்புகளை திணித்து செல்கின்றனர்... நானோ அதை அவசர கதியில் தின்று தீர்க்கிறேன் அந்த கால தேவன் வரும் முன்னே... #இரவு கவிதை. நாள்:25/01/25/சனிக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #love_shayari