தனித்து பறக்கும் பறவையே முழு ஆனந்தத்தை அனுபவிக்கிறது! அதற்கு எந்தவித இடையூறும் இல்லை வெட்டவெளியை விழுங்கிவிட முழு பிரயத்தனமும் செய்கிறது உற்சாகமாக! எந்தவித சஞ்சலங்களும் இல்லாமல் ஆனந்தத்தை குடிக்க தனிமை மட்டுமே உதவும் என்பதை உணர்ந்துவிட்ட தருணத்தில் இருந்து கூட்டங்களை புறக்கணிக்கிறது! மற்ற பறவைகள் கூச்சலிட்டு அழைக்கிறது மிகவும் பரிதாபமாக! இதற்கோ அது காதில் விழவில்லை முழு ஆனந்தம் எனும் தேனில் மூழ்கியதால்! இளையவேணிகிருஷ்ணா. கவிதை