புத்தகப்பை சுமக்கும் வருங்கால தொழிலாளியை கண்ணில் ஏக்க நெருப்போடு கண்டான் வருங்கால முதலாளியான இன்றைய குழந்தை தொழிலாளி. தீயன தீண்டா வலிமை மிகு நெஞ்சுடன் நேர்வழி உழைத்தான் நெடு உயரம் கண்டான் சமூகத்தில். ஆனாலும் இன்னும் அணையவில்லை ஏக்கத்தின் தீ கண்ணீரால் அணைக்க முயன்றான் அதே ஏக்கம் கொண்ட பிஞ்சுகளின் ஏக்கம் போக்கி ஆனந்தம் கொண்டான் #கல்லாதோர் #கல்வி #ஏக்கம் #yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar #கல்லாத_ஞானி