தண்ணீர் இன்றி வானமும் வெளுத்துவிட்டது பசுமை குன்றி மரமும் கருத்துவிட்டது கண் முன்னே கருமையும் வெறுமையும் மட்டுமே இது நரகமாய் மாறிப் போன நகரமா ? மனிதம் தேய்ந்து இதயம் சுருங்கிவிட்டது காற்றும் குறைந்து மூக்கும் மறைந்துவிட்டது மிரட்டும் பிம்பமாய் மானிடத்தின் பரிணாமமே இது மிரள வைக்கும் மாயாவி உலகமா ?? அலார ஒலி அடித்தது மெய் சிலிர்த்தது விழிப்பின் ஒளி தெரிந்தது இமை திறந்தது கண்ட கனவு கலைந்தது கனவு கலைந்தது உரிய தெளிவு பிறக்குமா ? இயற்கையின் விடியலை நோக்கி ?? #ஜீவந் #கனவு #பரிணாமம் #மாற்றம் #yqkanmani