அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் முதல் நாளிலே அதிகாலையில் நீராடி புது ஆடை உடுத்தி உறவினர் அக்கம்பக்கத்தினர் ஒன்றாய் சேர்ந்து ஆடி தேங்காய் எடுத்து ஓடு தேய தரைத்து ஒரு கண் உடைத்து அதனுள்ளே இருக்கும் தண்ணியை விடுத்து அரிசி வெல்லம் அவல்பருப்பு கலவையாக்கி ஒன்றாய் தேங்காய் தண்ணியோடு உள் சேர்த்து அழிஞ்சிமரக் குச்சியை ஓட்டையில் சொருகி அத்தேங்காய்க்கு திருமஞ்சள் பூசி குங்குமம் இட்டு அக்னி மூட்டி நம் தீய எண்ணங்கள் ஒழியத் தேங்காய் சுட்டு ஆண்டவனுக்குப் பிராசாதமாய் படைத்து உடைக்க அதர்மம் அழியத் தர்மம் வெல்லும் ! இவ்வாறே குருஷேத்திரப் போரில் அதர்மம் ஒழியத் தர்மம் வெல்ல நம் மூதாதையர் பின்பற்றினர் அவ்வழியே கடைப்பிடித்து நாமும் தர்மம் வெல்லப் போற்றுவோமாக !! -ஜீவந் #ஜீவந் #ஆடி #தேங்காய் சுடுதல் #தமிழ் #yqkanmani #yqquotes இது நாங்கள் காலம் காலமாய் கொண்டாடும் எங்கள் வட்டார விழா ! இதனை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி !!