❤️ கோபம் 03 ❤️
சுரையா முதலாம் வகுப்பு படிக்கும் போது அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது இருந்தாலும் பள்ளிக்கு சென்று விட்டாள். அங்கு அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனை பார்த்த அவள் ஆசிரியை அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அவளை தன் மகள் போல் அவளை பார்த்து கொண்டார். அன்று அவளுக்கு புரிந்தது ஆசிரியரும் தனக்கு அம்மா தான் என்று .
அன்று அவள் தன் மனதில் நானும் இவங்கள போல டீச்சர் தான் ஆவேன் என்று மனதில் நினைத்தாள். பசுமரத்தாணி போல் அவள் மனதில் அது கனவாகவே மாறியது அந்த பிஞ்சு மனதில். யாரேனும் விளையாட கூப்பிட்டாலும் டீச்சர் விளையாட்டு விளையாடலாமா என்று கேட்பாள் சிறுவயதில். அதை நினைத்து அழுது கொண்டு இருந்தாள் சுரையா.
பிறகு எனக்கும் என் தங்கைக்கும் நல்ல வாழ்க்கை துணை அமைத்து கொடு என்று இறைவனிடம் வேண்டியவாறு உறங்கினாள் சுரையா.
#story#காதல்#குடும்பம்