உன்னை என்னவென்று கூறுவேன்? அன்பே, ஆருயிரே, கண்ணே. பெயர்கள் பல்லாயிரம். ஆனால் உண்மை முற்றிலும் ஒன்றே. உன் பிம்பத்தை என்றும் காட்டும் என் கண்ணாடி இருதயத்தில் வாழும் காவியம் நீயே. என் விழிகளில் காணும் காட்சியும் நீயே. என் வார்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் சத்தியமும் நீயே. இருளில் எனக்குள் பிரகாசிக்கும் ஒளியும் நீயே. என் வாழ்வும் நீயே. என் ஆதியும் நீயே. அந்தமும் நீயே. அந்தாதியும் நீயே. என் சிறு உலகத்தில் வாழும் பெரும் அற்புதமும் நீயே. இவையெல்லாம் அறிந்த பின் உன்னை வெறும் ஒற்றை வார்த்தைகளால் கூறுவது தகுமோ? காதல் எனும் ஒளியில் குளிக்கும் பறவைகள் நாம். #lovwithmaquotes #lovequotes #lovepoem #tamillovequote #tamilpoem