காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ ஆணா ?? பெண்ணா ? உந்தன் பால் என்னவோ ? கவிபாடும் கவிஞருக்கு அழகின் அம்சமாய் உவமையின் காதலி நீ ! அன்னமூட்டூம் அன்னைக்கு அதிசியத்தின் ஓவியமாய் இரவின் தோழி நீ ! பாசப்பிரிவில் வாடுபவருக்கு அன்பின் உருவமாய் தாலாட்டும் தாய் நீ ! அறிந்தேன் தெளிந்தேன் காரிருளில் தனியே உலாவரும் நீ பாரிருளில் வெளியே வலம்வரும் நீ பெண் நிலவே !! பெண் நிலவே !! -ஜீவந் #ஜீவந் #நிலா #நிலவொளி #தமிழ்கவிதை #yqகண்மணி #yqkanmani