Find the Best dhanushkodi Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutdhanushkodi india, dhanushkodi before 1964, dhanushkodi rama sethu point, dhanushkodi history, dhanushkodi,
அன்பின் இரவல்
எஸ்தர்.. இந்த பேருல என்ன இருக்குன்னு தெரில மரியா. அது 64 ஆம் வருஷம் நவம்பர் மாசம் 6 தேதி சரியா ஒரு இரவு 3 மணிக்கு நடுக்கடலில் நான் என் நண்பர்களோட பேசுனது கூட எனக்கு அவளோ தெளிவா நினைவு இருக்கு..! டே.. நேத்து தான் நான் மதராஸ்ல இருந்து போட் மெயில இங்க வந்தேன் மதராஸ்ல ஒரு படம் பாத்தேன் டா என்ன அருமையான படம் தெரியுமா என்னமோ எனக்கு எஸ்தர்க்கும் நடந்தத எல்லாம் சினிமா பிடிச்சிட்ட மாதிரி இருந்தது..! அதுல குறிப்பா ஒரு பாட்டு வரும் அது அப்படியே என் எஸ்தர் எனக்கு நினைவு படுத்திச்சுன்னு.. நான் சொல்ல உடனே நண்பர்கள் என்ன படம் அதுன்னு கேட்க அதுவா.. புரட்சித் தலைவர் படம் டா என்றேன் உடனே படகோட்டி படமா... பாவி மதராசுக்கு எஸ்தர் பாக்க தானே போறேன் சொன்ன எப்படி படம் பாத்த.. டே அவ தான் படத்துக்கு அழைச்சிட்டு போனா.. என்ன சொல்றடா பாவி..! என்றனர் நானோ அதை பொருப்படுத்தாமல் டே நீங்க வானவில்லை இரவுல வேற வேற வண்ணத்தில் பாத்ததுண்டா... சரோஜாதேவி தோத்துறவாங்கடா.. அவளோ அழகு டா..! இது பொறுக்க முடியாமல் அவர்கள் டே போதும் டா உன் எஸ்தர் புராணம்..! தனுஷ்கோடி -2 . . #dhanushkodi #காதலியம்
தனுஷ்கோடி -2 . . #dhanushkodi #காதலியம்
read moreஅன்பின் இரவல்
மனசுல ஒரு விஷயம் மட்டும் பிறர்கிட்ட கேட்கணும் உறுதிருச்சுனா.. கட்டயமா கேட்காம விடமாட்டோம்.. அப்படித்தான் அன்னைக்கு மரியா தனக்குள்ள கிட்டத்தட்ட 53 வருசமா புதஞ்சுகிடந்த கேள்விய லூர்து கிட்ட கேட்டா... நமக்கு கல்யாணம் ஆகி முத 4 வருஷம் நீங்க ஒரு ஈடுபாடு இல்லாம இருந்தீங்க அப்போ அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு வலி இருக்குன்னு புரிஞ்சுகிட்ட நான் அத கேட்க வேணாம்ன்னு விட்டுட்டேன் ஆனா ஒவ்வொரு வருஷம் விடாம டிசம்பர் 22 நீங்க தனுஷ்கோடிக்கு போயிட்டு கிறிஸ்துமஸ் முத நாள் வருவீங்க இப்படியே 53 வருஷம் போகிருச்சு.. ஆனா நாளைக்கு டிசம்பர் 22 இந்த முறையாவது புறப்படுறதுக்கு முன்னாடி அந்த காரணம் சொல்லுங்க.. என்றாள் உடனே முதுமை நிறைந்த லூர்து முகத்தில் சார சாரயாய் கண்ணீர் தாரைகள் கண்ணீரை துடைத்துவிட்டு லூர்து பேசலானான் பர்மா வங்க கடல் கரையில, மரக்கட்டை தூக்கி போட்ட அது தானே மிதந்து எங்க தனுஷ்கோடிக்கு வந்து சேரும்ன்னு சொல்லுவாங்க அப்படி உதவின கடல் என் எஸ்தரோட பிணத்தை எங்க கரை சேர்த்தச்சோ தெரில..என சொல்லும்போது அவன் அழுகையின் அழுத்தம் கூடியது ஆனால் 75 வயதின் காரணமாக கண்ணீர் வரத்து கூட லூர்தின் கண்களில் தடைப்பட்டு விட்டது. 1964 இந்தியா சிலோன் போட் மெயில் சேவையில் ராமானுஜம் கப்பலில் லூர்து, கொதிகலன் மேற்பார்வையாளன் ஆனால் சதா அவன் பார்வை எல்லாம் அவள் எழுதிய காதல் கடிதத்தில் தான்.. தனுஷ்கோடி பாகம் 1 . . . #dhanushkodi #காதலியம்
தனுஷ்கோடி பாகம் 1 . . . #dhanushkodi #காதலியம்
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited