Find the Best இளையவேணிகிருஷ்ணா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
இளையவேணிகிருஷ்ணா
White வாழ்தல் ஒரு சாபம் என்கிறார்கள் அங்கே பல பேர்... நானோ வாழ்தல் ஒரு வரம் நீங்கள் எந்த ஜட பொருளோடோ எந்த ஜீவனோடோ பெரும் பற்றோடு பயணிக்காத வரை வாழ்தல் ஒரு பெரும் வரம் என்றேன்! அவர்களோ அது எப்படி என்றார்கள்... அந்த பாதையில் பயணித்து பாருங்கள் அப்போது தான் தெரியும் என்றேன்... #இரவு சிந்தனை 🍁. #இளையவேணிகிருஷ்ணா. நாள் :28/04/24. ஞாயிற்றுக்கிழமை. முன்னிரவு பொழுது 11:25. ©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning
இளையவேணிகிருஷ்ணா
White ஏதோவொரு தேடலோடு வாழ்க்கை நகர்கிறது! எதை தேடுகிறோம் என்று நாமே மறந்து விடும் அளவுக்கு காலம் நம்மை கை பிடித்து ஏதோவொரு மாய உலகிற்கு அழைத்துச் செல்கிறது... இதுவும் கடந்து போகும் என்று அங்கே யாரோ என்னை நோக்கி கூக்குரலிடுகிறார்கள் ... நானோ அதனால் என்ன நான் நிச்சலனமான மனதோடு பயணிக்கும் போது எதுவும் கடந்து போகட்டும்... எதிலும் நான் இல்லை அதனால் எனக்கு கவலை இல்லை என்றேன் அவர்களை பார்த்து நிதானமாக ஒரு புன்னகையோடு...😊 #இரவு கவிதை 🍁 #நாள்20/04/24. சனிக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Moon
இளையவேணிகிருஷ்ணா
White ஆசைகள் அநாதையாகும் போது நமக்கு ஞானம் பிறக்கிறது ! #இரவு சிந்தனை 🍁 நாள் சித்திரை 3. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #SAD
இளையவேணிகிருஷ்ணா
Black வாழ்வின் ஒவ்வொரு துளியும் ஆனந்தம் எனும் அமிர்தத்தால் நிரம்பி வழிகிறது! நான் அதை பொருட்படுத்தாமல் உப்பு தண்ணீரை இங்கே சுவைத்துக் கொண்டு வாழ்வெனும் சாலையில் சோகமாக பயணிப்பதை பார்த்து அந்த காலம் கலகலவென்று சிரித்து தொலைக்கிறது! #இரவு கவிதை 🍁 நாள்: சித்திரை -1. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Thinking
இளையவேணிகிருஷ்ணா
அந்த சூழலில் நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இந்த உலகம் ஆயிரம் ஆயிரம் யோசனைகளை சொல்லி சொல்லி அனுப்பி வைத்தது... அந்த சூழலை எதிர் கொண்டு திரும்பிய என்னை இந்த உலகம் கேட்டது என்ன நாங்கள் சொன்னபடி எல்லாம் சரியாக தானே முடிந்தது என்றது! ஆம்...அந்த சூழல் எந்த காயமும் அடையாமல் எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் நான்... அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு ஒரு வித நிம்மதியோடு விடை பெறுகிறார்கள்... #இரவு கவிதை 🍁. #இளையவேணிகிருஷ்ணா. நாள்:06/04/24. ©இளையவேணிகிருஷ்ணா #aaina
இளையவேணிகிருஷ்ணா
ஓடிக் கொண்டே இருக்கும் போது தான் இந்த உலகம் உங்களை மதிக்கிறது... ஆனால் அதற்காக ஓடாதீர்கள்... உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களால் முடியும் என்றால் பிடித்து இருந்தால் ஓடுங்கள்.. இல்லை என்றால் தள்ளி நின்று ஓடுபவர்களை வேடிக்கை பாருங்கள்... ஓடுவதை விட வேடிக்கை பார்ப்பதில் தான் சுவாரஸ்யம் அதிகம்! #,காலை சிந்தனை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள்:06/04/24. ©இளையவேணிகிருஷ்ணா #truecolors
இளையவேணிகிருஷ்ணா
ஒரு நதியை வேடிக்கை பார்ப்பது போல நாம் நம்மை கொஞ்சம் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க பழகிக் கொண்டால் வாழ்க்கை அப்படி ஒன்றும் சலிப்பல்ல என்று உற்சாகம் அடைவீர்கள்! #காலை சிந்தனை 🍁 நாள் 02/04/24. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #lakeview
இளையவேணிகிருஷ்ணா
வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே அப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்! வாழ்வின் அடுத்த தருணத்திற்கு நாம் செல்கிறோம்... இதில் வளர்ச்சியா தாழ்ச்சியா என்று நினைப்பது மாபெரும் மாயை! எந்த தருணம் நமக்கு கிடைக்கிறதோ அதை அப்படியே உள்வாங்கி ஆனந்தமாக உணர வேண்டும் இது தான் வாழ்வின் சுவாரஸ்யமான தருணத்தின் ரகசியம் 🦋🍁🪂🦸🧚🚣. காலை சிந்தனை ✨ நாள் :28/03/24. வியாழக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #retro
இளையவேணிகிருஷ்ணா
வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே அப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படாதீர்கள்! வாழ்வின் அடுத்த தருணத்திற்கு நாம் செல்கிறோம்... இதில் வளர்ச்சியா தாழ்ச்சியா என்று நினைப்பது மாபெரும் மாயை! எந்த தருணம் நமக்கு கிடைக்கிறதோ அதை அப்படியே உள்வாங்கி ஆனந்தமாக உணர வேண்டும் இது தான் வாழ்வின் சுவாரஸ்யமான தருணத்தின் ரகசியம் 🦋🍁🪂🦸🧚🚣. காலை சிந்தனை ✨ நாள் :28/03/24. வியாழக்கிழமை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #retro #வாழ்வின் #சுவாரஸ்யம்
இளையவேணிகிருஷ்ணா
நீங்கள் வாழ்வின் சுவையை அனுபவிக்க எவரது அனுமதியையும் எதிர் பார்த்து காத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு மோசமான வாழ்வியல் சூழலில் பின்னப்பட்டு இருக்கிறீர்கள்! நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு சிறை வாழ்க்கை வாழ்கிறீர்கள்! நான் நானாக வாழ எனக்கு அனுமதி கிடைத்து இருப்பது இறைவனின் பூரண அனுகிரகம்... #இளையவேணிகிருஷ்ணா. காலை சிந்தனை ✨. தேதி 25/03/24. திங்கட்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா