முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !! உன்னோடு சேர்ந்து பிறந்தோம் பெற்றோராய் நாங்களும் ! புதுவரவாய் முழுநிலவாய் வசந்தம் சேர்த்தாய் வாழ்வில் ! எண்ணமெல்லாம் நீயாக உன்னைப் பழக பார்க்க பல கலைகள் கற்றோம் ! சின்னஞ்சிறு உடல் சினுங்கல்களுக்கு பல அர்த்தம் புரிந்தோம் ! உந்தன் உணவு தூக்கம் சூழல் என பல ஆய்வுகள் மேற்கொண்டோம் ! உன் பெயரைத் தேடியதில் மொழி மீது கூடுதல் ஈர்ப்பு கொண்டோம் ! நீ சிரித்தாய் சிறகடித்தோம் தவழ்ந்தாய் துள்ளிகுதித்தோம் அமர்ந்தாய் அதிசயித்தோம் பேசினாய் மழலையில் மயங்கினோம் நின்றாய் வியந்தோம் நடந்தாய் திகைத்தோம் ! எங்கள் முகங்கள் மறைய சுயவிவரப் படமாய் அனுதினமும் நீ அரங்கேறினாய் புதுப்பொலிவுடன் !! மழலையோடு சேர்ந்து மழலையாகி மாற்றங்கள் கடந்த நாட்களின் ஆனந்த அனுபவங்களை வார்த்தைகளில் அளவிட முடியாது வாழ்க்கையில் மறக்க முடியாது !!! -ஜீவந் #தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள் முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !! உன்னோடு சேர்ந்து பிறந்தோம் பெற்றோராய் நாங்களும் ! புதுவரவாய் முழுநிலவாய்