Nojoto: Largest Storytelling Platform

முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !! உன்னோடு சேர

முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய் 
வசந்தம் சேர்த்தாய் வாழ்வில் !
எண்ணமெல்லாம் நீயாக 
உன்னைப் பழக பார்க்க 
பல கலைகள் கற்றோம் !
சின்னஞ்சிறு உடல் சினுங்கல்களுக்கு
பல அர்த்தம் புரிந்தோம் !
உந்தன் உணவு தூக்கம் சூழல் என
பல ஆய்வுகள் மேற்கொண்டோம் !
உன் பெயரைத் தேடியதில் மொழி
மீது கூடுதல் ஈர்ப்பு கொண்டோம் !
நீ சிரித்தாய் சிறகடித்தோம்
தவழ்ந்தாய் துள்ளிகுதித்தோம் 
அமர்ந்தாய் அதிசயித்தோம் 
பேசினாய் மழலையில் மயங்கினோம் 
நின்றாய் வியந்தோம் 
நடந்தாய் திகைத்தோம் !
எங்கள் முகங்கள் மறைய 
சுயவிவரப் படமாய் அனுதினமும் நீ 
அரங்கேறினாய் புதுப்பொலிவுடன் !!
மழலையோடு சேர்ந்து மழலையாகி 
மாற்றங்கள் கடந்த நாட்களின் 
ஆனந்த அனுபவங்களை 
வார்த்தைகளில் அளவிட முடியாது 
வாழ்க்கையில் மறக்க முடியாது !!!
          -ஜீவந்
 #தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள்


முதன் முதலாய் அழுகையை 
ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய்
முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய் 
வசந்தம் சேர்த்தாய் வாழ்வில் !
எண்ணமெல்லாம் நீயாக 
உன்னைப் பழக பார்க்க 
பல கலைகள் கற்றோம் !
சின்னஞ்சிறு உடல் சினுங்கல்களுக்கு
பல அர்த்தம் புரிந்தோம் !
உந்தன் உணவு தூக்கம் சூழல் என
பல ஆய்வுகள் மேற்கொண்டோம் !
உன் பெயரைத் தேடியதில் மொழி
மீது கூடுதல் ஈர்ப்பு கொண்டோம் !
நீ சிரித்தாய் சிறகடித்தோம்
தவழ்ந்தாய் துள்ளிகுதித்தோம் 
அமர்ந்தாய் அதிசயித்தோம் 
பேசினாய் மழலையில் மயங்கினோம் 
நின்றாய் வியந்தோம் 
நடந்தாய் திகைத்தோம் !
எங்கள் முகங்கள் மறைய 
சுயவிவரப் படமாய் அனுதினமும் நீ 
அரங்கேறினாய் புதுப்பொலிவுடன் !!
மழலையோடு சேர்ந்து மழலையாகி 
மாற்றங்கள் கடந்த நாட்களின் 
ஆனந்த அனுபவங்களை 
வார்த்தைகளில் அளவிட முடியாது 
வாழ்க்கையில் மறக்க முடியாது !!!
          -ஜீவந்
 #தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள்


முதன் முதலாய் அழுகையை 
ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய்

#தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள் முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !! உன்னோடு சேர்ந்து பிறந்தோம் பெற்றோராய் நாங்களும் ! புதுவரவாய் முழுநிலவாய்