Nojoto: Largest Storytelling Platform

காலையில் எழுந்தவுடன் உன் பிம்பத்தை பார்க்கும் நேர


காலையில் எழுந்தவுடன் உன் பிம்பத்தை பார்க்கும் நேரங்களில் 
உன் முகக்கண்ணாடியில் விழும்
பிம்பமாக நான் இருப்பேன். 

மழைத்துளிகள் உன் ஜன்னலை
முதமிடும் நேரம்
நீ தேநீர் பருகும்பொழுது
உன் கோப்பையின் ஓரத்தில்
இருக்கும் சுவையாக 
நான் இருப்பேன். 

இருள் உன்னை போர்வையாக
சூழும் நேரங்களில் 
உனக்குள் இருக்கும் ஒளியாக நான் இருப்பேன். 

இன்பத்தருணங்களில் 
உன் இருதயத்தை தாலாட்டும் 
நினைவாக என்றும், நான் இருப்பேன். 

வாழ்க்கை எனும் பாதையில் நடக்கும்பொழுது 
உன் கால் தடங்களை பதிவு செய்யும் 
மணலாக நான் இருப்பேன்.
சற்று திரும்பி பார்
உன்னை பின்தொடர்ந்து வரும்
நிழலாகவும் நான் இருப்பேன். 

உன்னிடம் ஓடி வந்து
உன் கைகளை கோர்த்தபொது
இதயத்துடிப்பே மணித்துளிகளாக
மாறும் அத்தருணம்
காலங்கள் மாறும் காட்சிகள் எல்லாம்
உன்னுடன் சேர்ந்து பார்க்கும்
துணையாக, என்றும்
உன் அருகில், நான் இருப்பேன். 

உன்னை நீ தேடும் நேரங்களில் 
என் விழிகளை பார், அதில் நீ 
ஒரு அழியாத ஓவியமாய் இருப்பாய். #tamilquotes #tamilpoems

காலையில் எழுந்தவுடன் உன் பிம்பத்தை பார்க்கும் நேரங்களில் 
உன் முகக்கண்ணாடியில் விழும்
பிம்பமாக நான் இருப்பேன். 

மழைத்துளிகள் உன் ஜன்னலை
முதமிடும் நேரம்
நீ தேநீர் பருகும்பொழுது
உன் கோப்பையின் ஓரத்தில்
இருக்கும் சுவையாக 
நான் இருப்பேன். 

இருள் உன்னை போர்வையாக
சூழும் நேரங்களில் 
உனக்குள் இருக்கும் ஒளியாக நான் இருப்பேன். 

இன்பத்தருணங்களில் 
உன் இருதயத்தை தாலாட்டும் 
நினைவாக என்றும், நான் இருப்பேன். 

வாழ்க்கை எனும் பாதையில் நடக்கும்பொழுது 
உன் கால் தடங்களை பதிவு செய்யும் 
மணலாக நான் இருப்பேன்.
சற்று திரும்பி பார்
உன்னை பின்தொடர்ந்து வரும்
நிழலாகவும் நான் இருப்பேன். 

உன்னிடம் ஓடி வந்து
உன் கைகளை கோர்த்தபொது
இதயத்துடிப்பே மணித்துளிகளாக
மாறும் அத்தருணம்
காலங்கள் மாறும் காட்சிகள் எல்லாம்
உன்னுடன் சேர்ந்து பார்க்கும்
துணையாக, என்றும்
உன் அருகில், நான் இருப்பேன். 

உன்னை நீ தேடும் நேரங்களில் 
என் விழிகளை பார், அதில் நீ 
ஒரு அழியாத ஓவியமாய் இருப்பாய். #tamilquotes #tamilpoems