நிரைநாரி சேரல் பெருந் தேரல் அரங்கேறி கண்ட கடகியவள் உழைநடையாய் வந்து மன்னவன் மார்பருகில் கனவுற்றாள் அரிவையின் ஆகம் அவன் கண்டிட நங்கை அங்கு நாணம் நிரப்பிட மூவுலகம் கிட்டா கன்னியவள் காதலை முக்காலமும் பெற்ற காளையிவன் அகிலம் ஆகுல ஆழி ஆகுல அந்தணன் அல்லா அற்புதம் செய்தான் பரியேறிய பதியாய் ஈன்றோர் சான்றோர் கடவுள் கனலின் கரி கொண்டு நின்னை புரவுவேன் என கங்கணம் கட்டினான் நுனிபுல் பனிபோல் ஆடவன் மேல் ஆடவளானாள் குவலயம் கூடி கொண்டாடிட மனதால் அவளை தினம் தினம் மணந்தான்!!! பொருள்: நிரை-மந்தை, வரிசை நாரி-பெண் சேரல்-கூடி தேரல்- ஆராய்தல் கடகி-துணைவி உழை-மான் ஆகம்- மார்பு