அடங்கி ஒடுங்கிய சாலைகள்!.. எத்தனை விலங்குகளின் சாபமோ? மைல்கள் தாண்டிய புகைவண்டிகள்!.. எத்தனை மைனாக்களின் மனம் நொந்ததோ? தொடரமுடியாத தொழிற்சாலைகள்!.. எத்தனை மரங்களின் தவங்களோ? நகரமே நகராமல் வீட்டில் அடைந்துள்ளது!.. எத்தனை சரணாலயத்தின் கதறல்களோ? இதுவரைப்போதும்! இனியும் வேண்டாமென... இயற்கை நடத்தும் இறைப்போர்!.. கடந்துபோன கரைகளைத் தேடும், இது காலத்தின் கட்டாயமாகும்!!.. #kavikuyilkanmani #tamilkavithai #tamilquotes #tamilpoetry #tamilbooks #yqdidi #yqquotes