முதல் குற்றம் செய்தப்பின் ஓர் மனநோய் பீடிக்கும் எங்கோ ஓர் மூலையில் மனமது மோதி மோதி பிராச்சித்தம் தேடிக் கொள்ளும் காரணங்களும் பின்புலமும் குற்றவாளிக்கு நீதி சொன்னாலும் குற்றம் புரிந்தவன் மனமோ குமுறுகின்ற எரிமலை தீபிளம்பு தீர்வற்ற சாபமிந்த சமதர்மம் கொன்ற மனமும் நிலையாது கொண்டு சேர்க்க முடியாது குற்றத்தின் காரணத்தை அர்த்தப்பட அந்நியருக்கு அவசியம் இல்லை ஆதலால் சொல்லியழ வழியில்லை சுத்தியல் கொண்டு நெஞ்சை அறைகிற வலியை உணர்ந்து கொண்டு என்னை கொன்று விடு இறைவா., என்னை கொன்று விடு சீக்கிரம் ஓ ஒருவேளை இந்த காரணங்கள் காட்டி கொன்றுவிட்டால் எனதிந்த மனவலியோ நின்னை சாருமோ..? இப்படி தீர்வின்றி மாட்டிக்கொண்டேன் குற்றமே தண்டனையாய்..! முதல் குற்றம் செய்தப்பின் ஓர் மனநோய் பீடிக்கும் எங்கோ ஓர் மூலையில் மனமது மோதி மோதி பிராச்சித்தம் தேடிக் கொள்ளும் காரணங்களும் பின்புலமும் குற்றவாளிக்கு நீதி சொன்னாலும்