Find the Best கவிஇறைநேசன்_கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மேடை பேச்சு கவிதைகள்,
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
நலமாக இருக்கிறேன் என்று...! காரணம் தேடி கை விட்டவர்கள் கஷ்டப்பட வேண்டாம்:-நான் நஷ்டப்பட்டு போய் விடுவேன் என்று! நலமுடன் தான் இருக்கிறேன்! அங்கும் இதையே வேண்டுகிறேன்! விரோதம் பாவிப்பதற்கு.. குரோதம் பழகவில்லை அதனால்.. துரோகம் செய்வதில்லை நானும்! விரும்பியது விரும்பியதாகவே இருந்துவிட்டு போகட்டும்: தோற்றுப்போனதாய் எண்ணிக் கொள்ளவில்லை; இனிவரும் நாட்களில் என் ஏற்றத்தில் யாரும் தோற்றதை ஏற்றுக்கொள்ளும் இடையூறு நிகழாதிருப்பதே... என் நீடு நெடிய பிராத்தனை!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள்
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
இடம் பொருள் பார்த்து...!!! இடம் புறம் பொருள் பார்த்து .. இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு.. இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
எங்கோ இருந்தாலும்...!! எங்கோ இருக்கிறாய் என்னை வதைக்கிறாய்! எண்ண அலைகளால் என்னை சுழற்றி அடிக்கிறாய்! யாரோ நீ யாத்திரை சிநேகிதன் போல் யாசக சாரலை விழிகளில் ஒட்டிப் போனது! நெடுஞ்சாலை பயணம் போல் நீளும் நினைவுகளை சாலையோர பூக்களைப் போல் சத்தமின்றி சருகுகளாகி சாந்தம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் சங்கமிக்கும் போதெல்லாம் இந்த நெடுஞ்சாலையில் என் ஜன்னலோரப் பயணம்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
கடைசி வரை...!! ஒரு படைப்பாளியின் படைப்புகள் பாராட்ட படவில்லை என்றால்... .பருவ மழைக் காணாத விளைநிலங்களின் விரிசலுக்குள் விழுந்து போன புல்லாங்குழல் போலாகும்! மீட்டினால் தானே ஒலி கேட்கும்? படைப்பாளிகளும் அப்படித் தான்! அஃது இல்லாது போனால் வீதியோரம் விற்கும் கரிம பழங்களை காசு கொடுத்து வாங்க பேரம் பேசும் நாம் பல்பொருள் அங்காடியின் குளிர்பதன பெட்டியில் பளபளக்கும் பழங்களுக்கு விலை கொடுத்து வாங்கி பெருமிதம் கொள்வது போல் தானே பொருள் பெறும்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி
கவி. இறைநேசன்
எனக்கு உனக்கு எதிர்மறை கருத்தில்லை ... #கவிஇறைநேசன்_கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with கவி. இறைநேசன் Collaborating with vanathi ramesh Collaborating with கவி. இறைநேசன் Collaborating with vanathi ramesh
கவி. இறைநேசன்
உன்னை மட்டுமே நெஞ்சில் ஏற்றி நான் தினமும் வழிபடுகிறேன் உன்னை ... #கவிஇறைநேசன்_கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with கவி. இறைநேசன் Collaborating with vanathi ramesh
கவி. இறைநேசன்
படித்துறை மண்டபத்தில் பூச்சரம் ஒன்று புன்னகை கொண்டு நாயகன் வரவு கண்டு #கவிஇறைநேசன்_கவிதைகள்
கவி. இறைநேசன்
கவிதையில் வைரம் பாய்ந்த நெஞ்சமே எங்கள் கரிசல் காட்டு கருங்குயிலே முத்தானது உனது படைப்புகள் முழு நிலவாகிறது உன் வாசமுள்ள எழுத்துக்களால் ... எம் சொல் கொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்! #கவிஇறைநேசன்_கவிதைகள்
கவி. இறைநேசன்
தேகம் மெலிந்தாலும் உன் மீதுள்ள மோகம் குறையவில்லை மாமா ... #கவிஇறைநேசன்_கவிதைகள்
கவி. இறைநேசன்
முத்த தினம் வருகிறது என்று தெரிந்தே நான் முன்பே மொத்தமாக உனக்கு கொடுத்து விட்டேனடா ... #கவிஇறைநேசன்_கவிதைகள்