Nojoto: Largest Storytelling Platform
nojotouser4257301675
  • 1.7KStories
  • 16.8KFollowers
  • 13.6KLove
    24.1LacViews

இளையவேணிகிருஷ்ணா

நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.

  • Popular
  • Latest
  • Repost
  • Video
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White ஏதோவொரு  தேடலோடு
வாழ்க்கை நகர்கிறது!
எதை தேடுகிறோம் என்று
நாமே மறந்து விடும் அளவுக்கு
காலம் நம்மை கை பிடித்து
ஏதோவொரு மாய உலகிற்கு
அழைத்துச் செல்கிறது...
இதுவும் கடந்து போகும் என்று
அங்கே யாரோ என்னை நோக்கி
கூக்குரலிடுகிறார்கள் ...
நானோ அதனால் என்ன
நான் நிச்சலனமான மனதோடு
பயணிக்கும் போது
எதுவும் கடந்து போகட்டும்...
எதிலும் நான் இல்லை
அதனால் எனக்கு 
கவலை இல்லை என்றேன்
அவர்களை பார்த்து நிதானமாக
ஒரு புன்னகையோடு...😊
#இரவு கவிதை 🍁
#நாள்20/04/24.
சனிக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Moon
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White ஆசைகள் 
அநாதையாகும் போது
நமக்கு ஞானம்
பிறக்கிறது !
#இரவு சிந்தனை 🍁
நாள் சித்திரை 3.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா
  #SAD
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

0 Bookings

83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

Black வாழ்வின் ஒவ்வொரு துளியும்
ஆனந்தம் எனும் அமிர்தத்தால்
நிரம்பி வழிகிறது!
நான் அதை பொருட்படுத்தாமல்
உப்பு தண்ணீரை இங்கே 
சுவைத்துக் கொண்டு
வாழ்வெனும் சாலையில்
சோகமாக பயணிப்பதை பார்த்து
அந்த காலம் கலகலவென்று
சிரித்து தொலைக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள்: சித்திரை -1.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Thinking
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

பாடலின் முதல் வரி என்ன?🎻🎻🎻

பாடலின் முதல் வரி என்ன?🎻🎻🎻 #சஸ்பென்ஸ்

153 Views

83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

அந்த சூழலில் 
நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் 
என்று
இந்த உலகம் 
ஆயிரம் ஆயிரம் யோசனைகளை
சொல்லி சொல்லி அனுப்பி வைத்தது...
அந்த சூழலை எதிர் கொண்டு
திரும்பிய என்னை இந்த உலகம் கேட்டது
என்ன நாங்கள் சொன்னபடி
எல்லாம் சரியாக தானே முடிந்தது என்றது!
ஆம்...அந்த சூழல் எந்த காயமும் அடையாமல்
எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் நான்...
அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு
ஒரு வித நிம்மதியோடு விடை பெறுகிறார்கள்...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #aaina
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

ஓடிக் கொண்டே இருக்கும் போது தான்
இந்த உலகம் உங்களை மதிக்கிறது...
ஆனால் அதற்காக ஓடாதீர்கள்...
உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்களால் முடியும் என்றால்
பிடித்து இருந்தால்  ஓடுங்கள்..
இல்லை என்றால் தள்ளி நின்று
ஓடுபவர்களை வேடிக்கை பாருங்கள்...
ஓடுவதை விட வேடிக்கை
பார்ப்பதில் தான் சுவாரஸ்யம் அதிகம்!
#,காலை சிந்தனை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #truecolors
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

#mothernature
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

ஒரு நதியை வேடிக்கை
பார்ப்பது போல
நாம் நம்மை கொஞ்சம் தள்ளி நின்று
வேடிக்கை பார்க்க பழகிக் கொண்டால்
வாழ்க்கை அப்படி ஒன்றும்
சலிப்பல்ல என்று
உற்சாகம் அடைவீர்கள்!
#காலை சிந்தனை 🍁
நாள் 02/04/24.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா
  #lakeview
loader
Home
Explore
Events
Notification
Profile