Find the Latest Status about kalai from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kalai.
KALAISELVAN DHANASEKARAN
உன் இதயம் இன்னும் துடித்து கொண்டிருந்தால்...... நீ சாதிக்க காலம் இருக்கிறது.... #kalaiselvan #upcoming_poet #motivational_quotes
Surya Kalaivani
பகுதி-6 மர்ம வீடு...☠️ மறுநாள் காலையில் ஐந்து பேரும் பெரியசாமியின் வீட்டுக்குச் சென்றனர். பெரியசாமியிடம் வேலைப் பார்க்கும் ராஜேந்திரன் அவரகளை உள்ளே அழைத்துச் சென்றார்.ஐயா பெயின்ட்டடிக்கப் பசங்க வந்துட்டாங்க என்றார் ராஜேந்திரன்."நீங்கதான கணக்குவழக்கெல்லாம் பார்க்கிறீங்க நீங்களேப் பார்த்து எல்லாம் சொல்லுங்க ராஜேந்திரன்" என்றார் பெரியசாமி.அனைவரையும் அந்த பெரிய வீட்டுக்கு அழைத்துச்சென்றார் ராஜேந்திரன்.செல்லும் வழியில் மக்கள் இவர்களை வெறித்துப் பார்த்தனர்.அவர்கள் பார்ப்பதைக் கண்ட கந்தன் " இவங்கயெல்லாம் ஏன்டா இப்படி பார்க்கிறாங்க" என்று வேலனிடம் கேட்டான்."நம்ம ஊருக்குப் புதுசுல அதான் இப்படிப் பார்க்கிறாங்க" என்றான் வேலன்.பேசிக்கொண்டே அந்தப் பெரிய வீட்டை நெருங்கினார்கள்.அந்த வீட்டின் பெரிய கேட்டை ராஜேந்திரன் திறந்தார்.அனைவரும் உள்ளே சென்றனர்.எவ்வளவுப் பெரிய வீடு என்று அனைவரும் வியந்துப் பார்த்தனர்.இந்த வீட்டை தான் பெயின்ட்டடிக்கனும் என்றார் ராஜேந்திரன்.நாங்க இதுக்கு முன்னாடி இந்தமாறிப் பெரிய வீட்டுக்கெல்லம் வேலைக்குப் போனதே இல்லை ஐயா.சின்னச் சின்ன வேலைக்குத்தான் போய்ருக்கோம் என்றான் குமரன்.நீங்க இந்த விட்டைச் சுத்தம் செய்துப் பெயின்ட்டடிக்கிற வரைக்கும் நீங்க எல்லாரும் என்னோட வீட்டுலயே தங்கிக்கலாம்.மூணு வேலையும் சாப்பாடு உங்களுக்கு வந்திடும் என்றார் ராஜேந்திரன். - மர்மம் தொடரும் - Surya kalaivani
- Surya kalaivani
read more@abhi_mish_raw
कलाई पर बंधी ये राखी आज भी, कलाई पर बंधी ये राखी आज भी है, इन आंखों में तेरे प्यार की झांकी आज भी है, तेरा लड़ना लड़ाना, लाड लडाना आंखों से ओझल होना, झट से आ जाना याद भी है, कलाई पर बंधी ये राखी आज भी है। Happy Rakshabandhan #kalai_par_bandhi_ye_rakhi #meri_kavits
Happy Rakshabandhan #kalai_par_bandhi_ye_rakhi #meri_kavits
read moreSurya Kalaivani
நகர மறுக்கும் மனதை தூரத்தில் உன்னைப் பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏனோ உன் அருகில் வராமல் எட்டாத தூரத்தில் நிற்கிறேன் நம் கண்கள் மட்டும் பேசிக் கொள்கிறது வெகு நேரம் கடந்து விடைப் பெற்று செல்லும் தருணத்தில் நகர மறுக்கும் மனதை என்ன சொல்லி சமாதானம் செய்வேன்....... Surya kalaivani
Surya kalaivani
read moreSurya Kalaivani
பகுதி-3 மர்ம வீடு.☠️ காண்ட்ராக்ட்டர் தான் வந்த விஷயத்தைப் பெரியசாமியின் மனைவியிடம் கூறினார்.பெரியசாமியின் மனைவியோ"மனுசன் வீட்ட விற்க முடிவெடுத்துட்டார் போல அதான் பெயின்ட்டடிக்க ஆள் ஏற்பாடு பண்ணியிருக்காரு பரவாயில்ல எதுஎப்படியோ அந்த வீட்ட விற்றால் சரி" என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள்.அந்த நேரம் பெரியசாமி வீட்டிற்க்கு வந்தார். உள்ளே நுழைந்ததும் "என்னங்க அந்த வீட்ட பெயின்ட்டடிக்க ஆள் வேணும்னு சொல்லியிருந்தீங்களாம் அதான் காண்ட்ராக்ட்டர் வந்திருக்கார்" என்றாள். சரி நீ போய் அவருக்குக் குடிக்க மோர் எடுத்துட்டு வா என்றார். ஐயா உங்களைப் பற்றி சொல்லுங்க என்று சொல்லி அமர்ந்தார் பெரியசாமி. ஐயா என் பெயர் உமையாலன்.நான் பக்கத்து ஊர்ல இருந்துவரேன் என்றார்."உமையாலன்" உங்க பெயர் ரொம்பப் புடிச்சிருக்கு என்றார் பெரியசாமி.ஐயா எங்க அப்பா முருகன் பக்தர் அதான் எனக்கு இந்தப் பெயர் வச்சாரு.நானும் ஒரு முருகன் பக்தன்.என்கிட்ட பெருசா வேலையாட்கள் இல்லை.அஞ்சுப் பசங்க இருக்காங்க.இருபது வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட வேலைக்கு வந்து சேர்ந்தப் பசங்க.அப்பா அம்மா இல்லாம சாப்பட்டுக்குக்ககூட வழியில்லாமக் கஷ்ட்டப்பட்டப் பசங்க.எனக்கு குழந்தைங்க இல்லை.எனக்கு எல்லாமே அந்தப் பசங்கதான்.அவங்க அஞ்சுப் பேருக்கும் முருகன் பேருதான் வச்சு என் புள்ளைங்கமாறி வளத்துட்டு இருக்கேன் என்றார்.-மர்மம் தொடரும் Surya kalaivani
Surya kalaivani
read moreSurya Kalaivani
பகுதி-2 மர்ம வீடு.....☠️ பெரியசாமியின் நண்பர் தனக்குத் தெரிந்த ஒரு காண்ட்ராக்டர் இருப்பதாகக் கூறினார்.அவரிடம் பேசி அவர் ஒத்துக்கொண்டால் வீட்டுக்கு வரசொல்லுங்கள் மற்ற விஷயங்களை நான் பேசிக் கொள்கிறேன் என்றார் பெரியசாமி.அந்த நண்பரும் அந்த காண்ட்ராக்டரிடம் பேசினார்.அவரும் ஒத்துக்கொண்டார்.வீட்டுமுகவரியைச் சொல்லிப் போக சொன்னார் அந்த நண்பர்.மறுநாள் காலையில் பெரியசாமி அந்தப் பெரிய வீட்டைப் பார்க்க சென்றுவிட்டார்.பெரியசாமியின் மனைவியோ "இந்த மனுசனுக்கு வேற வேலையே இல்லை எப்பப்பாரு காலையில எழுந்திருக்க வேண்டியது அந்த வீட்டு முன்னாடிபோய் நிற்க வேண்டியது. கல்யாண வேலை எத்தன வேலை இருக்கு அதலாம் பாக்காம போயிட்டாரு அந்த வீட்டப் பார்க்க வரட்டும் இன்னைக்கு கேட்காம விடமாட்டேன் .அந்த வீட்ட விற்க முடியுமா? முடியாதுனு? இன்னைக்கு கேட்டேத்தீருவேன்" என்று முனகிக் கொண்டு இருந்தாள்.அந்த காண்ட்ராக்டர் பெரியசாமியின் வீட்டுக்கு வந்தார். "ஐயா" என்ற சத்தம் வாசலில் கேட்டது.பெரியசாமியின் மனைவி வெளியே வந்தாள்."அம்மா பெரியசாமி ஐயா இருக்காறா நான் அவரப் பார்க்கனும்" என்றார். "அவர் கொஞ்சம் வெளியப் போய்ருக்காரு இப்போ வந்துடுவார் நீங்க வந்து உக்காருங்க" என்று சொல்லி அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஐயா நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்று கேட்டாள். - மர்மம் தொடரும் Surya kalaivani
Surya kalaivani
read moreSurya Kalaivani
பகுதி-1 மர்ம வீடு......☠️ பசுமையான அழகான ஊரில் பெரியசாமி என்றப் பணக்காரர் இருந்தார். அந்த ஊரில் உள்ள வாய்க்கால்,வரப்பு,தோட்டம்,தோப்பு அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர். அவருக்கு ஒரே மகள் அந்த மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெரிய வீடு ஒன்று இருந்தது.அந்த வீட்டை விற்க அவருக்கு மனம் இல்லை.அந்த வீடு பல வருடங்களாகப் பூட்டியே இருந்தது.அந்த வீட்டை சீரமைக்க நினைத்தார். அந்த வீட்டினால் ஏற்ப்பட்டப் பல சிக்கல்களால் அந்த வீட்டை ஊர்மககள் மர்ம வீடாகப் பார்த்தனர்.யாரேனும் வீடு கேட்டு வந்தால் கூட "அந்த பெரிய வீட்டைத் தவிற வேறு எந்த வீட்டை வேண்டுமென்றாலும் பாருங்கள்" என்றே கூறுவர்.இதனால் அந்த வீட்டிற்க்கு தங்குவதற்கு யாரும் வரவில்லை.பூட்டிய வீட்டைப் பல முறை சீரமைக்க முயன்றும் முடியவில்லை.ஏனெனில் அந்த வீட்டைப் பற்றி தெரிந்த உள்ளூர் பெயின்ட்டர்ஸ் யாரும் அந்த வீட்டை சீரமைக்க முன்வரவில்லை.வெளியூர் பெயின்டர்கள் சீரமைக்க முன்வந்தாலும் அந்த வீட்டைப் பற்றி ஊர்மக்கள் கூறும் கதையை கேட்டு தெறித்து ஒடிடுவர். இதனால் அந்த வீடு சீரமைக்கப்படாமல் பூட்டியே இருந்தது. மகளின் திருமணத்திற்க்காக சீரமைக்க நினைத்தார்.தனக்கு தெரிந்த நண்பரிடம் விஷயத்தைக் கூறினார். - மர்மம் தொடரும் Surya kalaivani
Surya kalaivani
read more