Find the Best தமிழால்இணைவோம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
balrajaug171996
தேடல் #தேடல் நதியில் கலந்து கடலில் தேடுகிறேன் காற்றில் கலந்து மலையில் தேடுகிறேன் மண்ணில் கலந்து மழையில் தேடுகிறேன் இருளில் கலந்து நிலவில் தேடுகிறேன் நிலவில் கலந்து இரவில் தேடுகிறேன் இசையில் கலந்து இயற்கையில் தேடுகிறேன் இயற்கையில் கலந்து என்னில் தேடுகிறேன்!
balrajaug171996
வாய்ப்புகளை உருவாக்க தெரிந்த சிலருக்கே வாழ்க்கை வரம் அளிக்கிறது வாய்ப்புகளை #வாய்ப்புகள் #yqkanmani #yqbaba #yqdidi #yqtales #yqtamil #yqaestheticthoughts #தமிழால்இணைவோம்
balrajaug171996
பஞ்சுமிட்டாய்காரன் இல்லாத சாலைகள் வண்ணங்களை மட்டுமல்ல குழந்தைகளையும் இழந்து இருக்கிறது #பஞ்சுமிட்டாய் #yqtales #yqdidi #தமிழ்கவிதைகள் #தமிழால்இணைவோம் #yqkanmani #yqtamil #yqbaba
balrajaug171996
வெற்றி என்னை வாரி சேற்றில் இரைத்தது தோல்வி என்னை தேற்றி சேற்றணைத்தது. The best companion ever♥️ #வெற்றி #தோல்வி #yqkanmani #yqtamil #தமிழால்இணைவோம் #yqbaba #yourquote #yqtales
balrajaug171996
பகல் பதவி விலகி இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது உள்ளம் உறங்காமல் கிடக்கிறது கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின் கழுத்துமணி ஓசை சேர்த்தது வேகமெடுத்த காற்றால் பக் பக் என பஞ்சார கோழிகள் மே மே என பட்டி ஆடுகள் தூரத்து கிணத்து மோட்டார் கிரீச் சத்தம் அனைத்தையும் அடக்கி ஆட்சி செய்துக்கொண்டிருந்தது இரவு எங்கும் நிசப்தம். நேற்று நான் ரசித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் எங்கே குழப்பத்திற்கு பின் வரும் தெளிவு போல இருந்தது வானம் அதை பார்த்துக்கற்றுக்கொண்டிருந்தது மனம் மழைக்கு முன் வரும் புயல் பற்றிய குழப்பமோ மழைக்கு பின் வரும் தெளிவான வானவில்லோ இல்லை வாழ்க்கை நாம் ரசிக்க வேண்டியது என்னவோ மழையைதான் இந்த பாடம் இரவின் மௌனத்திலிருந்தா இல்லை அதனால் முழித்து கொண்ட மனதின் ஆழத்திலிருந்தா? (READ CAPTION FOR BETTER VIEW) #கவிதைகளம் பகல் பதவி விலகி இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது உள்ளம் உறங்காமல் கிடக்கிறது . கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின் கழுத்துமணி ஓசை சேர்த்தது
balrajaug171996
பாராட்டு #Letsdoit பாராட்டும் நிலத்தடி நீரும் தான் தற்போது குறைத்துக் கொண்டே வருகிறது . சரி இல்லை என்று நொந்து கொள்பவர்கள் சரி எது என்று சொல்ல தெரியாதவர்கள் விழுந்து விட்டதையே விழி விரிய சொல்வார் எழுந்து வரும் வழி சொல்ல அறியாதவர் .
balrajaug171996
மௌனம் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை தருவது மௌனங்களே... . மௌனத்தின் வசிகரமே அது வார்த்தை அவிழ்த்து அந்தரங்க உண்மையை காட்டுவதுதான் . வார்த்தை சேர்த்து கொள்ளும் பொய்யை மௌனம் மறுத்துவிடுகிறது . தனித்து விட்ட மனதிற்கு மௌனம் கூறும் ஆறுதலே
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto