Nojoto: Largest Storytelling Platform

Best இளையவேணிகிருஷ்ணா Shayari, Status, Quotes, Stories

Find the Best இளையவேணிகிருஷ்ணா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 928 Stories

இளையவேணிகிருஷ்ணா

White இளைப்பாறி செல்கிறேன்
இங்கே இந்த தெரு விளக்கின்
அந்தவொரு வெப்பம் தாங்கிய
கிளையில்...
அந்தி சாயும் இந்த நேரம்
இன்னும் சற்று நேரத்தில்
முடிந்து விடும்...
எனது கூடெனும் வீட்டை
இங்கே அடையாளம் காண்பித்து
செல்லுங்கள்
சாலையில் ஆக்ரோஷமாக
பயணிக்கும் மனிதர்களே!
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/05/24.
வெள்ளிக்கிழமை.
முன்னிரவு பொழுது 9:24.

©இளையவேணிகிருஷ்ணா #Hope

இளையவேணிகிருஷ்ணா

White வாழ்தல் ஒரு சாபம் என்கிறார்கள்
அங்கே பல பேர்...
நானோ வாழ்தல் ஒரு வரம்
நீங்கள் எந்த ஜட பொருளோடோ
எந்த ஜீவனோடோ
பெரும் பற்றோடு பயணிக்காத வரை
வாழ்தல் ஒரு பெரும் வரம் என்றேன்!
அவர்களோ அது எப்படி என்றார்கள்...
அந்த பாதையில் பயணித்து பாருங்கள்
அப்போது தான் தெரியும் என்றேன்...
#இரவு சிந்தனை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் :28/04/24.
ஞாயிற்றுக்கிழமை.
முன்னிரவு பொழுது 11:25.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning

இளையவேணிகிருஷ்ணா

White ஏதோவொரு  தேடலோடு
வாழ்க்கை நகர்கிறது!
எதை தேடுகிறோம் என்று
நாமே மறந்து விடும் அளவுக்கு
காலம் நம்மை கை பிடித்து
ஏதோவொரு மாய உலகிற்கு
அழைத்துச் செல்கிறது...
இதுவும் கடந்து போகும் என்று
அங்கே யாரோ என்னை நோக்கி
கூக்குரலிடுகிறார்கள் ...
நானோ அதனால் என்ன
நான் நிச்சலனமான மனதோடு
பயணிக்கும் போது
எதுவும் கடந்து போகட்டும்...
எதிலும் நான் இல்லை
அதனால் எனக்கு 
கவலை இல்லை என்றேன்
அவர்களை பார்த்து நிதானமாக
ஒரு புன்னகையோடு...😊
#இரவு கவிதை 🍁
#நாள்20/04/24.
சனிக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Moon

இளையவேணிகிருஷ்ணா

இளையவேணிகிருஷ்ணா

Black வாழ்வின் ஒவ்வொரு துளியும்
ஆனந்தம் எனும் அமிர்தத்தால்
நிரம்பி வழிகிறது!
நான் அதை பொருட்படுத்தாமல்
உப்பு தண்ணீரை இங்கே 
சுவைத்துக் கொண்டு
வாழ்வெனும் சாலையில்
சோகமாக பயணிப்பதை பார்த்து
அந்த காலம் கலகலவென்று
சிரித்து தொலைக்கிறது!
#இரவு கவிதை 🍁
நாள்: சித்திரை -1.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Thinking

இளையவேணிகிருஷ்ணா

அந்த சூழலில் 
நான் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் 
என்று
இந்த உலகம் 
ஆயிரம் ஆயிரம் யோசனைகளை
சொல்லி சொல்லி அனுப்பி வைத்தது...
அந்த சூழலை எதிர் கொண்டு
திரும்பிய என்னை இந்த உலகம் கேட்டது
என்ன நாங்கள் சொன்னபடி
எல்லாம் சரியாக தானே முடிந்தது என்றது!
ஆம்...அந்த சூழல் எந்த காயமும் அடையாமல்
எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் நான்...
அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு
ஒரு வித நிம்மதியோடு விடை பெறுகிறார்கள்...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #aaina

இளையவேணிகிருஷ்ணா

ஓடிக் கொண்டே இருக்கும் போது தான்
இந்த உலகம் உங்களை மதிக்கிறது...
ஆனால் அதற்காக ஓடாதீர்கள்...
உங்களுக்கு பிடித்து இருந்தால்
உங்களால் முடியும் என்றால்
பிடித்து இருந்தால்  ஓடுங்கள்..
இல்லை என்றால் தள்ளி நின்று
ஓடுபவர்களை வேடிக்கை பாருங்கள்...
ஓடுவதை விட வேடிக்கை
பார்ப்பதில் தான் சுவாரஸ்யம் அதிகம்!
#,காலை சிந்தனை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:06/04/24.

©இளையவேணிகிருஷ்ணா #truecolors

இளையவேணிகிருஷ்ணா

இளையவேணிகிருஷ்ணா

வாழ்க்கை  இப்படி ஆகிவிட்டதே
அப்படி ஆகிவிட்டதே என்று
கவலைப்படாதீர்கள்!
வாழ்வின் அடுத்த தருணத்திற்கு
நாம் செல்கிறோம்...
இதில் வளர்ச்சியா தாழ்ச்சியா என்று
நினைப்பது மாபெரும் மாயை!
எந்த தருணம் நமக்கு கிடைக்கிறதோ
அதை அப்படியே உள்வாங்கி
ஆனந்தமாக உணர வேண்டும்
இது தான் வாழ்வின்
சுவாரஸ்யமான தருணத்தின்
ரகசியம் 🦋🍁🪂🦸🧚🚣.
காலை சிந்தனை ✨
நாள் :28/03/24.
வியாழக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #retro

இளையவேணிகிருஷ்ணா

#retro #வாழ்வின் #சுவாரஸ்யம் #இளையவேணிகிருஷ்ணா #எண்ணங்கள்

read more
loader
Home
Explore
Events
Notification
Profile